காணாமல் போன கணவரை ஆட்டோவில் சென்று ஊர் ஊராகத் தேடி அலையும் மனைவி

காணாமல் போன கணவரை ஆட்டோவில் சென்று ஊர் ஊராகத் தேடி அலையும் மனைவி

1 mins read
640f0a5d-d5a4-4584-bdf3-cacbe2e57c17
காணாமல் போன கணவரை ஆட்டோவில் ஒலிபெருக்கி கட்டி ஊர் ஊராகச் சென்று தேடி வரும் பழனியம்மாள். படம்: தமிழக ஊடகம் -

வாழப்­பாடி: சேலம் மாவட்­டம், வாழப்­பா­டி­யில் பழ­னி­யம்­மாள் என்­ப­வர் காணா­மல் போன தனது கண­வரை கடந்த 10 நாள்களுக்கும் மேலாக ஊர் ஊரா­கச் சென்று தொடர்ந்து தேடி வரு­கி­றார்.

காவல்­நி­லை­யத்­தில் புகார் அளித்­தும் கண்­டு­பி­டிக்க முடி­யா­மல் உள்­ள­தால், ஓர் ஆட்­டோ­வைப் பிடித்து அதில் ஒலி­பெ­ருக்­கி­க­ளைக் கட்­டி­விட்டு தனது கண­வரை யாரேனும் பார்த்­தி­ருந்­தால் தன்­னி­டம் கூறும்படி பிர­சா­ரம் செய்து வரு­கி­றார்.

அந்த ஆட்­டோ­வின் வெளிப்­புறப் பகு­தி­களில் தனது கண­வ­ரின் புகைப்­ப­டத்­து­டன் கூடிய சுவ­ரொட்டியை கட்டிவிட்டும் துண்டுப் பிர­சு­ரங்­களை விநியோ­கித்­தும் உதவி கோரி வருகிறார்.

தொடர்ந்து சரியான சாப்பா டின்றி, மனமொடிந்த நிலையில் கணவரைத் தேடி அலை­யும் கூலித்­தொ­ழி­லாளியான பழ­னி­யம்­மாளின் நிலைமை காண்­போரை வேத­னைக்­குள்­ளாக்கி வரு­கிறது.

வாழப்­பாடியை அடுத்த முத்­தம்­பட்டி பகு­தி­யைச் ­சேர்ந்­த­வர் சிவ­ரா­மன், 45. இவர் வாழப்­பாடி வட்­டாட்­சி­யர் அலு­வ­ல­கத்துக்கு வரும் பொது­மக்­க­ளுக்கு விண்­ணப்­பம் பூர்த்தி செய்து கொடுத்து வந்­தார். குறைந்த வருமானமே கிடைத்து வந்த நிலை­யி­லும் மனைவி, குழந்­தை­க­ளு­டன் மிகுந்த பாசத்­தோடு இருந்து வந்­தார். அண்மையில் இவரது உடல்­நிலை சிறிது பாதிக்­கப்­பட்­டது. இந்­நி­லை­யில், இம்­மா­தம் 7ஆம் தேதி தனது வீட்­டி­லி­ருந்து வாழப்­பா­டிக்­குச் சென்றவர் வீடு திரும்­பவில்லை.