தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரயில்வே நிர்வாகம்: ரயில் தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுத்தால் ரூ.2,000 அபராதம்

1 mins read
60b3c6ad-b0c2-4b11-a1e0-3670f9605381
பக்கவாட்டு கம்பியைப் பிடித்துக்கொண்டு ரயிலின் படிக்கட்டில் சாய்ந்தபடி செல்ஃபி எடுக்கும் இளையர். படம்: ஊடகம் -

சென்னை: ரயில் தண்­ட­வா­ளங்­களில் நின்று செல்ஃபி எடுத்­தால் ரூ.2,000 அப­ரா­தம் விதிக்­கப்­படும். அதே­போல், ரயில் படிக்­கட்­டு­களில் நின்று பய­ணம் செய்­தால் ரூ.500 அப­ரா­தம் அல்­லது மூன்று மாதம் சிறைத் தண்­டனை விதிக்­கப்­படும் என்று சென்னை ரயில்வே கோட்­டம் எச்­ச­ரிக்கை செய்­துள்­ளது.

கடந்த ஓராண்­டில் மட்டும் சென்னை புற­ந­கர் ரயி­லில் இருந்து விழுந்து உயி­ரி­ழந்­த­வர்­கள், காயம் அடைந்தவர்­க­ளின் எண்­ணிக்கை 200க்கும் மேல் தாண்­டி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், படி­யில் தொங்­கியபடி பய­ணம் செய்­வோர் மீது கடும் நட­வ­டிக்கை எடுப்பதற்கு முடி­வெ­டுத்துள்ள தெற்கு ரயில்வே நிர்­வா­கம், படி­யில் பய­ணம் செய்­வோ­ருக்கு மூன்று மாத சிறைத் தண்­டனை அல்­லது 500 ரூபாய் அப­ரா­தம் விதிக்­கப்­படும் எனத் தெரி­வித்து உள்­ளது.

மேலும், தண்­ட­வா­ளங்­களில் நின்று செல்ஃபி எடுப்­போ­ருக்கு ரூ.2,000 அப­ரா­தம் விதிக்­கப்­படும் என­வும் அறி­வித்துள்ளது.

இது­கு­றித்து தெற்கு ரயில்வே வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில், ஓடும் ரயில்­களில் படிக்­கட்­டில் தொங்­கிக்கொண்டு பய­ணம் செய்­ப­வர்­கள், தண்­ட­வா­ளத்­தில் நின்றுகொண்டு செல்ஃபி எடுப்­பவர்­கள் மீது தெற்கு ரயில்­வே­யின் சென்னை மண்­ட­லம் கடும் நட­வ­டிக்கை எடுக்க உள்­ளது.

சென்னை புற­ந­கர் மின்­சார ரயில் தண்­ட­வா­ளங்­களில் அத்து­மீறி கடப்­ப­வர்­கள், செல்­ஃபி எடுப்­ப­வர்­கள், காணொளி எடுப்­ப­வர்­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்கப்­பட்­டுள்­ளது. இது­தொ­டர்­பாக ரயில்­ ப­ய­ணி­களிடம் வி­ழிப்­பு­ணர்வு ஏற்படுத்தப்படும் எனக் கூறியுள்ளது.