தமிழக அரசு எச்சரிக்கை; மனிதவள மேலாண்மைத் துறைச் செயலாளர் சுற்றறிக்கை இரண்டாம் திருமணம் புரியும் அரசு ஊழியர் மீது நடவடிக்கை

தமிழக அரசு எச்சரிக்கை; மனிதவள மேலாண்மைத் துறைச் செயலாளர் சுற்றறிக்கை இரண்டாம் திருமணம் புரியும் அரசு ஊழியர் மீது நடவடிக்கை

2 mins read
556bf0bf-7cab-4114-9d72-c7827fcc17a2
-

சென்னை: கண­வனோ, மனை­வியோ உயி­ரு­டன் இருக்­கும்­போது பணி­யில் உள்ள அரசு ஊழி­யர்­கள் இரண்­டா­வது திரு­ம­ணம் செய்­வது தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மா­கக் கரு­தப்­படும்.

இப்­படி இரு­தார மணம் புரி­யும் அரசு ஊழி­யர்­கள் மீது குற்­ற­வி­யல் வழக்­குத் தொட­ரப்­பட்டு, துறை ரீதி­யான ஒழுங்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என தமி­ழக அரசு எச்­ச­ரித்து உள்­ளது.

தமிழ்­நாடு அர­சின் மனி­த­வள மேலாண்­மைத் துறைச் செய­லா­ளர் மைதிலி ராஜேந்­தி­ரன், அர­சுத்­துறை செய­லா­ளர்­கள், மாவட்ட ஆட்சி யர்­கள், உயர் நீதி­மன்­றப் பதி­வா­ளர்­கள் உள்­ளிட்­டோ­ருக்கு சுற்­றிக்கை ஒன்றை அனுப்­பி­யுள்­ளார்.

அதில், ஒரு­சில அர­சுப் பணி யாளர்­க­ளின் இறப்­பிற்­குப் பிறகே அவர்­கள் இரு­தார மணம் புரிந்­தி­ருந்­தது தெரி­ய­வந்­துள்­ளது.

இதன் கார­ண­மாக அப்­ப­ணி­யா­ளர்­க­ளின் வாழ்க்­கைத் துணைக்கு ஓய்­வூ­தி­யப் பலன்­களை அளிப்­ப­தில் சிக்­கல்­கள் ஏற்­ப­டுவ தாக­வும் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

எனவே, அர­சுப் பணி­யா­ளர்­கள் முதல் மனை­வியோ அல்­லது கண வரோ உயி­ரு­டன் இருக்­கும் நிலை­யில், இரண்­டா­வ­தாக ஒரு­வரை மணம் புரிந்­தாலோ அல்­லது தவ­றான முறை­யில் தொடர்பு கொண்­டி­ருந்­தாலோ அவர்­கள் மீது துறை ரீதி­யான நட­வ­டிக்­கை­க­ளு­டன் குற்­ற­வி­யல் வழக்­குப் பதியவும் அறி­வுறுத்­தப்­பட்­டுள்­ள­தாக மைதிலி ராஜேந்­தி­ரன் தெரி­வித்துள்­ளார்.

சென்னை உயர் நீதி­மன்ற மது­ரைக் கிளை­யின் உத்­த­ர­வின்­படி சுற்­ற­றிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்ள தாக அரசு தெரி­வித்­துள்­ளது.

1973ஆம் ஆண்­டின் தமிழ்­நாடு அர­சுப் பணி­யா­ளர் சட்ட விதி­முறை களின்­படி, பணி­யி­லுள்ள அரசு ஊழி­யர் தனது முதல் மனைவி உயி­ரோடு இருக்­கும்­போது இரண்­டா­வது திரு­ம­ணம் செய்­யக்­கூ­டாது என்ற வரை­யறை உள்­ளது.

அவ்­வாறு இரண்­டா­வது திரு­மணம் செய்­வது ஒழுக்­கக்­கே­டா­னது என­வும் அர­சின் மரி­யா­தைக்கு இச்­செ­யல் இழுக்கு ஏற்­ப­டுத்­தும் என­வும் அரசு கூறி­யுள்­ளது.

அத்­து­டன், அரசு ஊழி­யர் இரண்­டா­வது திரு­ம­ணம் செய்­வ­தால் சட்­ட­ரீ­தி­யாக முதல் மனை­விக்கு கிடைக்­க­வேண்­டிய பலன்­கள் முறை­யா­கக் கிடைப்­ப­தில்லை எனக் குறிப்­பிட்­டுள்ள மாநில அரசு, முதல் மனைவி உயி­ரோடு இருக்­கும் போது இரண்­டா­வது திரு­ம­ணம் செய்­யும் அரசு ஊழி­யர்­கள் மீது துறை ரீதி­யான நட­வ­டிக்­கை­யு­டன் குற்­ற­வி­யல் வழக்­குப் பதி­ய­வும் அறி­வு­றுத்தி உள்­ளது.