அரசு: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை

அரசு: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை

2 mins read
68eb48d0-6b2e-4bea-9aca-2cebe0e6e265
கீதா ஜீவன். படம்: ஊடகம் -

போக்சோ சட்டத்தில் 4,023 வழக்குகள் பதிவு

சென்னை: பெண்­க­ளுக்கு எதி­ராக நடை­பெ­றும் குற்­றங்­கள் மீது உட­ன­டி­யாக நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­வ­தாக அமைச்­சர் கீதா ஜீவன் தெரி­வித்­துள்­ளார்.

சட்­டப்­பே­ர­வை­யில் சமூக நலன், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் துறை மானி­யக் கோரிக்கை மீதான விவா­தத்­தின்­போது பேசிய அவர், திமுக ஆட்­சி­யில் பெண்­கள் முன்­னேற்­றத்­துக்­காக பல்­வேறு திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

கடந்த பத்து மாதங்­களில் மட்­டும் தமி­ழ­கத்­தில் பாலி­யல் குற்­றங்­கள் தொடர்­பாக போக்சோ சட்டத்தின் கீழ் 4,023 வழக்­கு­கள் பதி­வாகி உள்­ள­தா­க­வும் பாலி­யல் தொல்­லை­கள் குறித்து பெண்­கள் உட­னுக்­கு­டன் புகார் அளிக்க முன்­வர வேண்­டும் என்­றும் அமைச்­சர் கீதா ஜீவன் வலி­யு­றுத்­தி­னார்.

"பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உள்­ளா­கும் பெண்­களும் குழந்­தை­களும் 1098, 14417 ஆகிய உதவி எண்­களில் புகார் தர முன்­வர வேண்­டும். அத்­த­கைய புகார்­கள் மீது உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும் என முதல்­வர் உத்­த­ர­விட்­டுள்­ளார். "அவ­ரது அறி­விப்பு அளித்­துள்ள நம்­பிக்­கை­யின் கார­ண­மாக, உதவி எண்­க­ளுக்கு வரும் அழைப்­பு­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. கடந்த காலங்­களில் நடந்த குற்றச் செயல்­க­ளுக்கு கூட தற்­போது தாமாக முன்­வந்து புகார் தெரி­விக்­கின்­ற­னர்," என்­றார் அமைச்­சர் கீதா ஜீவன்.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2021 மார்ச் வரை மக­ளிர் உதவி எண் 181க்கு வந்த மொத்த அழைப்புகள் 17,423 என்று குறிப்­பிட்ட அவர், கடந்த ஓராண்­டில் மட்­டும் 15,046 அழைப்­பு­கள் வந்­துள்­ள­தா­கச் சுட்­டிக்­காட்­டி­னார்.

பாதிக்­கப்­பட்ட பெண்­க­ளுக்­கான ஒருங்­கி­ணைந்த சேவை மையங்­களின் மூலம் கடந்த 2018 முதல் 2021ஆம் ஆண்டு மார்ச் வரை 13,121 பேர் பய­ன­டைந்­த­தா­க­வும் நடப்பு திமுக அரசு பொறுப்­பேற்ற இந்த ஓராண்டு காலத்­தில் மட்­டுமே 13,152 பேர் பய­ன­டைந்து உள்­ள­னர் என்­றும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

"கடந்த ஆண்டு மே முதல் கடந்த மார்ச் மாதம் வரை 10 மாதங்­களில் போக்சோ (குழந்­தை­க­ளுக்கு எதி­ரான பாலி­யல் குற்­றத் தடுப்பு) சட்­டத்­தின் கீழ் 4,023 வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்டு உள்­ளன. 36 வழக்­கு­களில் தண்­டனை விதிக்­கப்­பட்டு உள்­ளது. இத்தகைய குற்றங்கள் தொடர்பில் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது," என்று அமைச்சர் கீதா ஜீவன் மேலும் கூறினார்.