நடிகர் சூரி புகார்: காவல்துறை முன்னாள் டிஜிபி மீது மோசடி வழக்கு பதிவு

நடிகர் சூரி புகார்: காவல்துறை முன்னாள் டிஜிபி மீது மோசடி வழக்கு பதிவு

1 mins read
cf8450d0-5329-4031-8543-125d37ae573b
நடிகர் சூரி. படம்: ஊடகம் -

சென்னை: நடி­கர் சூரி அளித்­துள்ள புகா­ரின் பேரில் நடி­கர் விஷ்ணு விஷா­லின் தந்தை மீது பண மோசடி வழக்கு பதி­வாகி உள்­ளது.

சென்­னையை அடுத்­துள்ள சிறு­சேரி பகு­தி­யில் நிலம் வாங்­கித் தரு­வ­தா­கக் கூறி, விஷ்ணு விஷா­லின் தந்­தை­யும் காவல்­துறை முன்­னாள் டிஜி­பி­யு­மான ரமேஷ் குடவா­லா­வும் திரைப்­ப­டத் தயா­ரிப்­பா­ளர் அன்­பு­வேல் ராஜன் என்­ப­வ­ரும் தம்மை ஏமாற்­றி­விட்­ட­னர் என்­பது சூரி­யின் புகார்.

மொத்­தம் ரூ.2.70 கோடி பெற்­றுக்­கொண்டு தம்மை ஏமாற்­றி­விட்­ட­தாக சூரி எழுப்­பி­யுள்ள புகாரை ரமேஷ் குட­வாலா திட்­ட­வட்­ட­மாக மறுத்­துள்­ளார்.

இந்­தப் புகார் தொடர்­பாக சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு காவல்­து­றை­யி­னர் உரிய விசா­ரணை நடத்தி ஆறு மாதங்­க­ளுக்­குள் அறிக்கை தாக்­கல் செய்ய சென்னை உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது. இதை­ய­டுத்து சூரி­யி­டம் இரண்­டு முறை விசா­ரணை நடத்­திய காவல்­துறை அதி­கா­ரி­கள், தேவைப்­பட்­டால் மீண்­டும் அழைப்­ப­தா­கக் கூறி­யுள்­ள­னர். மேலும், சூரி குறிப்­பிட்ட சிறு­சேரி பகு­திக்­கும் சென்று விசா­ரணை மேற்­கொண்­ட­தா­கத் தெரி­கிறது.

இதற்­கி­டையே, சூரிக்குத் தர வேண்­டிய தொகை­யில் ரூ.1.30 கோடி ஏற்­கெ­னவே கொடுக்­கப்­பட்டு­விட்­ட­தா­க­வும் மீத­முள்ள தொகை ரூ.1.40 கோடி­தான் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

சூரி­யி­டம் விசா­ரணை நடத்தி முடிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், அடுத்த ­கட்­ட­மாக முன்­னாள் டிஜிபி ரமேஷ் குட­வாலா, அன்­பு­வேல் ராஜன் ஆகிய இரு­வ­ரி­ட­மும் விரி­வான விசா­ரணை நடத்­தப்­பட உள்­ள­தாக காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.