இரட்டை சகோதரிகளைப் பாராட்டி பரிசு

இரட்டை சகோதரிகளைப் பாராட்டி பரிசு

1 mins read
541ebf7b-c13f-423a-b246-b7ff39eda6e6
சிறுமிகளுக்குப் பரிசு வழங்கும் முதல்வர். படம்: ஊடகம் -

சென்னை: தமிழ் நூல்­களை மன­னம் செய்து, கச்­சி­த­மாக ஒப்­பிக்­கும் திறன் கொண்ட இரட்­டைச் சகோ­த­ரி­க­ளைப் பாராட்டி தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் ஒரு லட்­சம் ரூபாய் பரிசு வழங்கி உள்­ளார்.

தேனி மாவட்­டத்­தைச் சேர்ந்த செந்­த­மிழ் சாலினி, முத்­த­மிழ் சாமினி ஆகிய சிறு­மி­க­ளின் தமிழ் ஆர்­வத்­தைப் பாராட்டி இந்த பரிசு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இரு­வ­ரும் திருக்­கு­றள், தொல்­காப்­பி­யம், திருப்­பாவை, திரு­வெம்­பாவை ஆகிய நூல்­களை மன­னம் செய்து, பிழை­யின்றி ஒப்­பித்து, பல்­வேறு விரு­து­க­ளைப் பெற்­றுள்­ள­னர்.

இது குறித்து முதல்­வர் மு.க.ஸ்டா­லின் கவ­னத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­டது. இரு சிறு­மி­க­ளை­யும் நேரில் அழைத்­துப் பாராட்­டிய முதல்­வர், அவர்­க­ளது தமிழ் இலக்­கிய இலக்­க­ணத் திறனை மேலும் ஊக்­கு­விக்­கும் வித­மா­க­வும் அவர்­க­ளது குடும்­பச் சூழ்­நி­லை­யைக் கரு­தி­யும் பள்­ளிக்­கல்­வித் துறை­யின் சார்­பில் தலா ஒரு லட்­சம் ரூபாய் என, மொத்­தம் இரண்டு லட்­சம் ரூபாய்க்­கான காசோ­லை­களை வழங்கி வாழ்த்­தி­னார். தேனி மாவட்டம், மறவப்பட்டி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் இந்தச் சகோதரிகள் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.