மு.க.ஸ்டாலின்: வீடு தேடி கல்வித் திட்டம் அவசியம்

மு.க.ஸ்டாலின்: வீடு தேடி கல்வித் திட்டம் அவசியம்

1 mins read
17b4c055-38bb-418d-817e-0b6477388734
-

சென்னை: கொரோனா கால பொது­மு­டக்­கம், கட்­டுப்­பாடு கார­ண­மாக மாண­வர்­க­ளுக்கு கற்­றல் இழப்பு ஏற்­பட்­ட­தாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

அத­னைச் சரி செய்­யவே இல்­லம் தேடி கல்வி திட்­டத்தை அறி­வித்து, தமி­ழக அரசு அதை வெற்றிக­ர­மாக செயல்­ப­டுத்தி வரு­வ­தாக அவர் சென்­னை­யில் நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் பேசும்­போது குறிப்­பிட்­டார்.

மேலும், 'நான் முதல்­வன்' என்ற புது­மை­யான திட்­டத்­தை­யும் தாம் தொடங்கி வைத்­துள்­ள­தாக அவர் தெரி­வித்­தார்.

"பள்ளி பரு­வம் என்­பது புத்­த­கங்­க­ளோடு அடங்கி விடா­மல், எல்லா திசை­க­ளி­லும் இருக்­கக்­கூ­டி­ய­வற்றை கற்­கக்­கூ­டி­ய­தாக அமை­ய­வேண்­டும். எந்­த­வி­த­மான அழுத்­தங்­களும் இல்­லா­மல் இருக்­கக்­கூ­டிய காலக்­கட்­ட­மாக அமைய வேண்­டும்.

"கற்­றல் என்­பது மகிழ்ச்­சி­யோடு ஈடு­ப­டக்­கூ­டிய செயல்­பா­டாக மாறட்­டும். நல்ல நோக்­க­மிக்­க­தாக ஊரும், மாநி­ல­மும், நாடும் திகழ பெற்­றோர்­கள், ஆசி­ரி­யர்­கள், மாண­வர்­கள் இணைந்து சமத்­துவ சிந்­த­னையை வளர்க்­கும் தூது­வர்­க­ளாக மாற­வேண்­டும்," என்­றார் முதல்வர்.