தென்மாவட்டங்களில் நீடிக்கும் கனமழை

தென்மாவட்டங்களில் நீடிக்கும் கனமழை

1 mins read
486dfb01-5339-4b14-8ac3-b17c9721b6f3
-

குமரி: தமி­ழ­கத்­தின் தென்மாவட்­டங்­களில் கன­மழை நீடித்து வரு­கிறது. இத­னால் கோடை வெயி­லின் தாக்­கம் குறைந்­த­தால் பொது­மக்­கள் மகிழ்ச்சி அடைந்­த­னர்.

நேற்று முன்­தி­னம் கன்­னி­யா­குமரி, நெல்லை, தென்­காசி, விரு­து­ந­கர், தேனி, திண்­டுக்­கல், நீல­கிரி ஆகிய ஏழு மாவட்­டங்­களில் பர­வ­லாக நல்ல மழை பெய்­தது.

கன்­னி­யா­கு­மரி மாவட்­டம் தக்­கலை, திங்­கள்­ந­கர், குளச்­சல் உட்­பட மாவட்­டத்­தின் பல்­வேறு பகுதி­களில் இடி மின்­ன­லு­டன் கன மழை பெய்தது. விரு­து­ந­கர், தேனி மாவட்­டங்­களில் இரவு முழு­வ­தும் மழை நீடித்­த­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

தூத்­துக்­கு­டி­யில் கயத்­தாறு, கழுகு­மலை உள்­ளிட்ட பகு­தி­களில் பலத்த மழை பெய்­தது. சில இடங்­களில் போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்­டது. விரு­து­ந­கர் மாவட்­டம் வத்­தி­ரா­யி­ருப்பு, திருவில்­லிப்­புத்­தூர் சுற்று­வட்­டாரப் பகு­தி­களில் கன­மழை கொட்டி தீர்த்­த­தாக தமி­ழக ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.