கே.எஸ்.அழகிரி: முதல்வர் நடவடிக்கையால் மின்வெட்டு சீரடையும்

கே.எஸ்.அழகிரி: முதல்வர் நடவடிக்கையால் மின்வெட்டு சீரடையும்

2 mins read
eb8cc553-7929-4318-a73d-d66e7d801451
-

சென்னை: முதல்­வர் மு.க.ஸ்டா­லின் மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்­கை­க­ளின் பல­னாக தமி­ழ­கத்­தில் மின்­வெட்டு சீர­டை­யும் என நம்­பு­வ­தாக தமி­ழக காங்­கி­ரஸ் தலை­வர் கே.எஸ்.அழ­கிரி தெரி­வித்­துள்­ளார்.

தஞ்­சை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், தமி­ழ­கத்­தில் மின்­வெட்டு ஏற்­பட்டு வரு­வ­தற்கு மத்­திய தொகுப்­பில் இருந்து நிலக்­கரி வழங்­கா­ததே கார­ணம் என சாடி­யுள்­ளார்.

"மற்ற துறை­க­ளைப் போலவே மின்­சாரத் துறை­யி­லும் மத்­திய அரசு தோல்வி கண்­டுள்­ளது. எனி­னும் மத்­திய அரசை நம்­பி­யி­ருக்­கா­மல் தமி­ழக முதல்­வர் ஸ்டா­லின் மின்­வெட்டு ஏற்­ப­டா­மல் இருக்க பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளார். இதன் கார­ண­மாக மின்­வெட்டு இல்­லாத நிலை ஏற்­படும் என நம்­பு­கி­றே­ன்," என்­றார் கே.எஸ்.அழ­கிரி.

இந்­நி­லை­யில், தமி­ழ­கத்­தில் தடை­யில்லா மின் விநியோ­கத்தை பரா­ம­ரிக்க நாளொன்­றுக்கு 72 ஆயி­ரம் டன் நிலக்­கரி வழங்­கு­வதை மத்­திய அரசு உறுதி செய்­திட வேண்­டும் என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் வலி­யு­றுத்தி உள்­ளார்.

இது தொடர்­பாக அவர் பிர­த­மர் மோடிக்கு எழு­தி­யுள்ள கடி­தத்­தில் ஒடி­சா­வில் உள்ள தல்­சர் சுரங்­கங்­களில் இருந்து போது­மான நிலக்­கரி தமி­ழ­கத்­தில் உள்ள மின் உற்­பத்தி நிலை­யங்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டி­யது மிக அவ­சி­யம் எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

"தமி­ழ­கத்­தில் தொழிற்­சா­லை­களுக்கு 72 ஆயி­ரம் டன் நிலக்­கரி தேவைப்­படும் நிலை­யில், தற்­போது நாள்­தோ­றும் நிலக்­கரி வரத்து 50 ஆயி­ரம் டன் அள­விற்கு மட்­டுமே உள்­ளது.

"தமி­ழ­கத்­தில் அதி­க­ரித்து வரும் கோடைக்­கால மின் தேவையை பூர்த்தி செய்­திட நிலக்­கரி உற்­பத்தி போது­மா­ன­தாக இருந்­தா­லும், ரெயில்­களில் 'ரேக்­கு­'க­ளின் பற்றாக்­குறை கார­ண­மாக, அது துறை­முகங்­க­ளுக்கு கொண்டு செல்­லப்­படு­வ­தில்லை. இதன் விளை­வாக தமி­ழ­கத்­தில் மின் உற்­பத்தி நிலை­யங்­களில் நிலக்­கரி இருப்பு கவலை கொள்­ளத்­தக்க அள­விற்கு எட்­டி­யுள்­ளது," என முதல்­வர் ஸ்டா­லின் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

உள்­நாட்டு நிலக்­கரி பற்­றாக்­குறை கார­ண­மாக, தமிழ்­நாடு மின் உற்­பத்தி, பகிர்­மான கழ­கம் தடை­யற்ற மின் விநி­யோ­கத்தை பரா­ம­ரிப்­ப­தற்­காக அதிக விலை கொடுத்து நிலக்­க­ரியை இறக்­கு­மதி செய்ய வேண்­டிய நிலை உள்­ளது என்று குறிப்­பிட்­டுள்ள தமி­ழக முதல்­வர், இது கொரோனா பெருந்­தொற்­றுக்கு பிந்­தைய பொரு­ளா­தா­ரத்தை கணி­ச­மாக பாதிக்­கும் என்று கூறி­யுள்­ளார்.

இந்த விஷ­யத்­தில் பிர­த­மர் உட­ன­டி­யாக தலை­யிட வேண்­டும் என்­றும் அவர் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.