தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியை உள்ளடக்கும் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை எனத் திட்டவட்டம் இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதி

2 mins read
846154cd-9b47-4499-ae19-bc81e363ce55
-

சென்னை: தமி­ழ­கப் பள்­ளி­களில் இரு மொழிக் கொள்கை மட்­டுமே பின்­பற்­றப்­படும் என தமி­ழக அரசு திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளது.

மேலும், இந்தி உட்­பட வேறு எந்த மொழி­யும் தமி­ழ­கப் பள்­ளி­களில் மூன்­றா­வது மொழி­யாக இடம்­பெ­றாது என்று பள்­ளிக்­கல்­வித்­துறை தெளி­வு­ப­டுத்தி உள்­ளது.

தமி­ழ­கத்­தில் அனைத்து மட்­டங்­க­ளி­லும் தாய்­மொ­ழி­யா­கிய தமிழ், உல­கத்­திற்­கான இணைப்பு மொழி ஆங்­கி­லம் என இரு­மொ­ழிக் கொள்கை மட்­டுமே கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கிறது.

இந்­நி­லை­யில் மும்­மொ­ழிக் கொள்­கை­யைப் புகுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மாநில அரசு சத்­த­மின்றி மேற்­கொண்டு வரு­வ­தாக நேற்று சில ஊட­கங்­களில் செய்தி வெளி­யா­னது. இத­னால் சமூக, மொழி ஆர்­வ­லர்­கள் கடும் அதிர்ச்சி அடைந்­த­னர்.

இந்­நி­லை­யில், தமி­ழக பள்­ளிக் கல்­வித்­துறை இந்­தச் செய்தி அடிப்­ப­டை­யற்­றது என்று மறுப்பு தெரி­வித்­தது. நீண்­ட­கா­ல­மாக அம­லில் உள்ள இரு­மொ­ழிக் கொள்­கையை மாற்­றி­ய­மைக்­கும் திட்­டம் ஏதும் இல்லை என்­றும் கல்­வித்­துறை திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­யுள்­ளது.

பள்­ளிக்­கல்­வித் துறை ஆணை­யர் நந்­த­கு­மார் வெளி­யிட்ட அறி­விப்­பில், தமி­ழ­கத்­தில் இரு­மொ­ழிக் கொள்கை தொடர்ந்து செயல்­ப­டுத்­தப்­படும் என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

மத்­திய அரசு புதிய கல்­விக் கொள்கை என்ற அறி­விப்­பின் மூலம் நாடு முழு­வ­தும் மும்­மொ­ழிக் கொள்­கையை அமல்­ப­டுத்த முயற்சி மேற்­கொண்டு வரு­வ­தா­கப் புகார் எழுந்­துள்­ளது.

மூன்­றா­வது மொழி­யாக இந்­தியைச் சேர்க்க வேண்­டும் என்­பதே மத்­திய அர­சின் மறை­முக நோக்­கம் என சமூக ஆர்­வ­லர்­கள் சாடி வரு­கின்­ற­னர்.

தமி­ழ­கத்­தில் பத்­தாம் வகுப்பு வரை அனைத்து மாண­வர்­களும் தமிழ்­மொ­ழி­யைக் கட்­டா­யம் கற்க வேண்­டும் என்ற உத்­த­ரவு உள்­ளது என்­றும், கடந்த 2006ஆம் ஆண்டு பிறப்­பிக்­கப்­பட்ட அந்த உத்­த­ர­வில் எந்­த­வித மாற்­ற­மும் இல்லை என்­றும் பள்­ளிக்­கல்­வித்­துறை ஆணை­யர் நந்­த­கு­மார் கூறி­யுள்­ளார்.

தமி­ழைத் தாய்­மொ­ழி­யா­கக் கொள்­ளாத மாண­வர்­க­ளுக்கு தமிழ் மொழி­யு­டன் சேர்த்து அவர் தம் தாய் மொழி­யை­யும் விருப்­பப்­பா­ட­மாகத் தேர்வு செய்து எழு­தும் நடை­மு­றை­யும் தமி­ழ­கத்­தில் பின்­பற்­றப்­ப­டு­கிறது.

"மும்­மொழிக் கொள்கை என்ற எந்த நட­வ­டிக்­கை­யும் அமல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை, அனு­ம­திக்­கப்­ப­ட­வும் இல்லை. இரு­மொ­ழிக் கொள்­கை­தான் அமல்­ப­டுத்­தப்­ப­டு­கிறது," என பள்­ளிக்­கல்­வித்­துறை ஆணையர் நந்தகுமார் அறிக்கை வழி தெளி­வு­ப­டுத்தி உள்­ளார்.