தமிழக அரசு சின்னம் குறித்து மீண்டும் சர்ச்சை

தமிழக அரசு சின்னம் குறித்து மீண்டும் சர்ச்சை

1 mins read
2fadfe78-bec6-4013-8b48-fb38d208e908
-

மதுரை: தமி­ழக அரசு சின்­னத்­தில் இருப்­பது திரு­வில்­லிப்­புத்­தூர் கோவிலா அல்­லது மதுரை மீனாட்சி அம்­மன் கோவிலா என்ற சர்ச்சை மீண்­டும் எழுந்­துள்­ளது.

அரசு சின்­னத்­தில் இருப்­பது மதுரை மீனாட்சி அம்­மன் கோவி­லின் கோபு­ரம்­தான் என்று மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மதுரை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சு.வெங்­க­டே­சன் டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார்.

தமி­ழக அர­சின் சின்­னத்தை ஓவி­யர் கிருஷ்­ண­ராவ் என்­ப­வர் உரு­வாக்கி இருந்­தார். அவர் மதுரை கோவிலை மைய­மாக வைத்தே அரசு சின்­னத்தை உரு­வாக்­கி­ய­தாக பல­முறை கூறி­ய­போ­தும், சர்ச்சை முடி­வுக்கு வர­வில்லை.

மதுரை, திரு­வில்­லிப்­புத்­தூ­ரைச் சேர்ந்­த­வர்­கள் அரசு சின்­னத்­தில் தங்­கள் பகு­தி­யில் உள்ள கோவில்­தான் இடம்­பெற்­றுள்­ளது என்று பெருமை பேசி வந்­த­னர்.

இந்­நி­லை­யில், வெங்­க­டே­சன் எம்பி தமது டுவிட்­டர் பதி­வில், "தமி­ழக அர­சின் சின்­னம் திருவில்­லிப்­புத்­தூர் கோபு­ரம் என்றே இது­வரை சொல்­லப்­பட்­டது.

"ஆனால் அந்த சின்­னத்தை வடி­வ­மைத்த கலை­ஞர் கிருஷ்­ண­ராவ் தாம் மதுரை தெற்கு கோபு­ரத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டே அந்த சின்­னத்தை வடி­வ­மைத்­தி­ருப்­ப­தாகச் சொல்­லி­ இ­ருக்­கி­றார். "அது தொடர்­பாக கட்­டுரை ஒன்று வெளி­யாகி உள்­ளது," என்று குறிப்­பிட்டு அந்­தக் கட்­டு­ரை­யை­யும் படம் எடுத்து தமது பதி­வில் இணைத்­துள்­ளார். மேலும், மது­ரை­யின் மகு­டத்­தில் ஒளி­கூட்­டும் மற்­று­மொரு கல் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.