ஊழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சகாயம் வலியுறுத்து

1 mins read
cdd837cb-f238-4bc2-b2f6-baaa5bd2e94e
சகாயம். படம்: ஊடகம் -

மதுரை: இன்­றைய இளை­ஞர்­க­ளி­டம் ஊழ­லுக்கு எதி­ரான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தி­னால் வருங்­கா­லத்­தில் ஊழலை ஒழித்துவிட­லாம் என முன்­னாள் ஐஏ­எஸ் அதி­காரி சகா­யம் கூறி­யுள்­ளார்.

மது­ரை­யில் நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் பேசிய அவர், இந்­திய தேர்­தல் ஆணையத்­தில் பதிவு செய்து எந்த அர­சி­யல் கட்­சி­யை­யும் தாம் தொடங்­க­வில்லை என்­றார்.

"அரசு நிர்­வா­கத்­தில் நேர்­மை­யாக இருப்­ப­வர்­கள், ஊழலை எதிர்ப்­ப­வர்­கள் செயல்­பட முடி­யாது என்று முடி­வெ­டுத்­து­தான், அர­சுப் பத­வி­யி­லி­ருந்து விலக முடிவு செய்­தேன். அது அர­சி­யல் முடிவு என்­பது சரி அல்ல. அர­சி­ய­லில் நுழைய வேண்­டும் என நான் விரும்பி இருந்­தால் பிர­பல திரை நட்­சத்­தி­ரங்­கள் அழைத்­த­போதே நான் சென்­றி­ருப்­பேன்.

"ஆனால், ஜன­நா­யக முறைப்­படி தேர்தல் களத்­தில் போட்­டி­யிட வேண்­டும் என என்­னோடு இருந்­த­வர்­கள் ஆசைப்­பட்­டார்­கள். அவர்­க­ளுக்­கா­கவே தேர்­தல் பிர­சா­ரம் மேற்­கொண்­டேன்," என்­றார் சகா­யம்.

தமி­ழ­கத்­தில் படித்த ஒன்­பது மில்­லி­யன் இளை­யர்­கள் அரசு வேலை­வாய்ப்­புக்­கா­கப் பதிவு செய்து காத்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், அதை தட்­டிப்­ப­றிக்­கும் வகை­யில் வட­மா­நி­லத்­தி­னர் போலி சான்­றி­தழ் கொடுத்து, அரசு வேலை­யில் சேர்­வதை அரசு தடுக்க வேண்­டும் என்­றார்.

"ஊழல் செய்­ப­வர்­க­ளா­லும், வாக்­கு­க­ளைப் பெற மக்­க­ளுக்கு லஞ்­சம் கொடுப்­ப­வர்­க­ளா­லும்­தான் இனி அர­சி­ய­லில் இருக்க முடி­யும். அது எங்­க­ளால் முடி­யாது. நாங்­கள் ஊழ­லுக்கு எதி­ரா­ன­வர்­கள்," என்று சகா­யம் மேலும் தெரி­வித்­தார்.