தீயணைப்பு பணிக்கு 50 ஆளில்லா வான்கலம்

தீயணைப்பு பணிக்கு 50 ஆளில்லா வான்கலம்

2 mins read
7dd48383-a3d5-49e0-8b70-b6442d09085f
-

சென்னை: தீய­ணைப்­புத் துறை யின­ருக்கு உத­வும் வகை­யில் 'ட்ரோன்­கள்' எனப்­படும் 50 ஆளில்லா வான்­க­லங்­களை இன்­னும் 15 நாள்­களில் வாங்க உள்­ள­தாக அறி­வித்­துள்­ளது தமி­ழக தீய­ணைப்­புத் துறை.

தீய­ணைப்பு, மீட்­புப் பணி­களில் துரி­த­க­தி­யில் செயல்­ப­ட­வும் முழுத் திற­னு­டன் பிரச்­சி­னை­க­ளைக் கையா­ள­வும் தமி­ழக தீய­ணைப்­புத் துறை­யி­னர் இந்த ஆளில்லா விண்­க­லத்­தைப் பயன்­ப­டுத்த முடிெவ­டுத்­துள்­ள­னர்.

இதற்­காக, தமிழ்­நாடு ஆளில்லா விமான நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து ரூ.1 கோடி செல­வில் 50 வான்­க­லங்­க­ளைத் தீய­ணைப்­புத்­துறை வாங்­க­உள்­ளது.

இந்த வான்­க­லங்­கள் மூலம் தீ வேக­மா­கப் பர­வு­வது தடுக்­கப்­ப­டுவ துடன் விரை­வா­க­வும் அணைக்­கப் பட்­டு­வி­டும். அதோடு மனித உயி­ரி­ழப்­பு­க­ளை­யும் சேதத்­தை­யும் பெரு­ம­ளவு குறைக்­க­மு­டி­யும் என தீய­ணைப்­புத் துறை­யினா் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளனா்.

இந்த வான்­க­லங்­கள் மூலம் தீ விபத்து சம­யங்­களில் எந்த இடத்­தில் மனி­தா்­கள் சிக்­கி­யுள்­ளனா், அவா்களை எந்த வழி­யில் மீட்க முடி­யும், தீயின் தாக்­கம் எந்­தப் பகு­தி­யில் அதி­க­மாக உள்­ளது, தீ எந்த திசையை நோக்கி வேக­மா­கப் பர­வு­கிறது உள்­ளிட்ட விவ­ரங்­களை உடனே கண்­ட­றிந்து அதற்­கான உட­னடி தீர்வு காண முடி­யும் என தமி­ழக தீய­ணைப்­புத் துறை­யைச் சோ்ந்த உய­ர­தி­காரி ஒரு­வர் தெரி­வித்தாா்.

இந்த வான்­க­லங்­க­ளைக் கையா­ளும் முறை குறித்து தீய­ணைப்­புத் துறை வீரா்க­ளுக்கு தமிழ்­நாடு ஆளில்­லாத விமா­னக் கழக வல்­லு­நா்­கள் வரும் மே மாதம் முதல் பயிற்சி அளிக்­க­வுள்­ளனா்.

இது­தொ­டா்­பாக அந்த நிறு­வ­னத்­தின் தலை­மைச் செயல் அதி­காரி பேரா­சி­ரியா் கே.செந்­தில்­குமாா் கூறு­கை­யில், "தீய­ணைப்­புத் துறைக்கு 50 ஆளில்லா வான் கலங்­கள் இன்­னும் 15 நாள்­களில் வழங்­கப்­பட்­டு­வி­டும். இதன்­மூ­லம் மனி­தா்­கள் செல்­ல­மு­டி­யாத தீ விபத்து பகு­தி­கள், புகை மூட்­டம் அதி­க­முள்ள பகு­தி­கள், அடுக்­கு­மா­டிக் கட்­ட­டங்­கள், மலைப் பகு­தி­களில் தீய­ணைப்­புத் துறை விரைந்து செயல்­பட முடி­யும்.

"ஒரு கிலோ 200 கிராம் எடை­கொண்ட இந்த வான்­க­லங்­க­ளால் 30 நிமி­டங்­களுக்குத் தொடர்ந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை பறக்கமுடியும். இந்த வான்­க­லத்­தில் பொருத்­தப்­பட்­டி­ருக்­கும் 'எச்.டி. 4 எக்ஸ் ஜூம்' கண்காணிப்புக் கேமரா மூலம் துல்­லி­ய­மாக காட்சி­ க­ளைப் பதிவு செய்யவும் துரித மாக மீட்­புப் பணி­யில் ஈடு­படவும் முடி­யும்," என்றாா் அவா்.

தமி­ழ­கத்­தில் கடந்­தாண்டு 16,809 தீவி­பத்­துச் சம்­ப­வங்­கள் ஏற்­பட்­டன. இந்த விபத்துகளில் சிக்கி 82 போ் உயிரிழந்து உள்­ளனா். 182 போ் பாது­காப்­பு­டன் மீட்­கப்­பட்­டுள்­ளனா்.