விசிறிகள் விற்பனை மும்முரம்

விசிறிகள் விற்பனை மும்முரம்

1 mins read
6275d3bd-6f0f-4da7-94b9-69259fa77f53
-

புதுக்­கோட்டை: தமி­ழ­கத்­தில் பல­ரும் மறந்து போயி­ருந்த பனை ஓலை விசிறி மீண்­டும் மக்­கள் கைகளில் தவ­ழத் தொடங்கி உள்­ளது.

கோடை வெய்­யில் சுட்ெட­ரிக்­கும் இந்­தக் காலத்­தில் மின்­வெட்­டும் அவ்­வப்­போது ஏற்­ப­டு­வ­தால், கோடை வெப்­பம், இர­வுப் புழுக்­கத்தைச் சமா­ளிக்க மக்­க­ளின் பார்வை இந்த விசி­றி­யின் பக்­கம் திரும்­பி­யுள்­ளது.

இதுகுறித்து வியா­பாரி ஒரு­வர் கூறு­கை­யில், ''புதுக்­கோட்டை மாவட்­டம், பேரை­யூர் பகு­தி­யில் பனை ஓலை­யில் விசிறி தயா­ரிக்­கும் தொழி­லில் ஏரா­ள­மான தொழி­லா­ளர்­கள் ஈடு­பட்­டுள்­ள­னர். இங்­கி­ருந்து பல இடங்­க­ளுக்­கும் விசி­றி­கள் ஏற்றுமதி செய்யப்படு கின்றன.

"கடை­க­ளி­லும் சந்­தை­க­ளி­லும் இந்த பனை ஓலை விசிறி விற்­பனை தற்­போது மும்­மு­ர­ம­டைந்­துள்­ளது. ஒரு பனை ஓலை விசிறி ரூ.10 முதல் ரூ.15 வரைக்­கும் விற்­ப­னை­யா­கிறது. இதே­போல் பிளாஸ்­டிக் விசி­றி­க­ளின் விற்­ப­னை­யும் அதி­க­ரித்­துள்­ளது,'' என்­றார்.