அரசே துணை வேந்தர்களை நியமிக்க மசோதா நிறைவேற்றம்

அரசே துணை வேந்தர்களை நியமிக்க மசோதா நிறைவேற்றம்

1 mins read
1a8f9ffb-c517-4c4c-9c93-be06dfde569c
-

சென்னை: மாநில அரசே தமிழ்­நாட்டுப் பல்­க­லைக்கழ­கங்­க­ளின் துணை வேந்­தர்­களை நிய­மிக்க வகை செய்­யும் சட்ட மசோதா தமி­ழக சட்­டப்­பே­ர­வை­யில் கார­சார விவா­தத்­துக்குப் பிறகு நேற்று ஒரு­ம­ன­தாக நிறை­வே­றி­யது.

இதன்மூலம் தமிழகப் பல்க லைக் கழகங்களில் துணை வேந் தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்­ன­தாக இம்­ம­சோ­தா­வுக்கு எதிர்ப்பு தெரி­வித்து சட்­ட­ச­பை­யில் இருந்து அதி­முக, பாஜக எம்­எல்­ஏக்­கள் வெளி­ந­டப்பு செய்­த­னர்.

தமிழ்­நாட்­டில் உள்ள அனைத்­துப் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளின் துணை­வேந்­தர்­கள், துறைத் தலை­வர்­க­ளாக உள்ள பேரா­சி­ரி­யர்­கள் கூட்­டத்தை ஆளு­நர் ஆர்.என்.ரவி நீல­கிரி மாவட்­டம், உத­கை­யில் தன்­னிச்­சை­யாக கூட்­டி­யிருப்­ப­தற்குப் பதி­ல­டி­யாக இம்­ம­சோதா தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

துணை வேந்­தர்­களை மாநில அரசே நிய­மிக்­கும் சட்ட மசோ­தா­ நிறைவேற்றத்தை மக்­கள் நீதி மய்­யம் கட்சி வர­வேற்றுள்ளது.

இதற்கிடையே, பல்­க­லைக்­கழகத் துணைவேந்­தர்­கள் பங்­கேற்­கும் இரண்டு நாள் மாநாட்டில் உரை யாற்றிய ஆளுநர், "தற்­போ­தைய கல்வி முறை­யில் மாற்­றம் தேவை என்­றும் பல்கலைக்­க­ழ­கங்­கள் அதற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்கவேண்­டும்," என்­றும் வலி­யு­றுத்­தி­ உள்ளார்.