மலேரியா ஒழிப்பு: தமிழக அரசுக்கு விருது

மலேரியா ஒழிப்பு: தமிழக அரசுக்கு விருது

1 mins read
fa6c9cc2-21f1-487b-b425-9f98853d279e
-

பெங்­க­ளூரு: மலே­ரியா ஒழிப்­புப் பணி­யில் சிறப்­பா­கச் செயல்­பட்ட தமி­ழக அர­சுக்கு மத்­திய சுகா­தார அமைச்சு விருது வழங்கி உள்­ளது.

தமி­ழ­கத்­தில் 31 மாவட்­டங்­களில் மலே­ரியா அறவே இல்லை என்­ப­தால் இந்த விருது வழங்­கப்­பட்­டுள்­ள­தாக தமி­ழக பொது சுகா­தா­ரத் துறை சிறப்பு இயக்­கு­நர் டாக்­டர் வடி­வே­லன் தெரி­வித்­தார்.

2024ஆம் ஆண்­டுக்­குள் தமி­ழ­கத்­தில் மலே­ரியா நோயை முழு­மை­யாக ஒழித்­திட மாநில அரசு முனைப்­பு­டன் செயல்­பட்டு வரு­வ­தா­க­வும் 1990களில் 1.20 லட்­ச­மாக இருந்த மலே­ரியா நோய் பாதிப்பு எண்­ணிக்கை, 2011ஆம் ஆண்­டில் 22,171ஆக குறைந்­துள்­ள­தாகவும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

தற்­போது தமி­ழ­கத்­தில் 772 பேருக்கு மட்­டுமே மலே­ரியா பாதிப்பு உள்­ளது என்­றும் நோயைக் கண்­ட­றியத் தேவை­யான ஆய்­வக வச­தி­கள் உள்­ளன என்­றும் மாநில சுகா­தா­ரத்­துறை தெரி­விக்­கிறது.

இந்­தி­யா­வில் மலே­ரி­யாவை 2030ஆம் ஆண்­டுக்­குள் ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிர்­ண­யித்துள்ளது. இந்நிலை­யில், 2024ஆம் ஆண்­டுக்­குள் தமி­ழ­கம் அந்த இலக்கை எட்­டிப்­பிடிக்­கும் என தமிழக சுகாதாரத்துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.