'ஆன்மிக பயணம் முடிந்தது; விரைவில் அரசியல் பயணம்'

'ஆன்மிக பயணம் முடிந்தது; விரைவில் அரசியல் பயணம்'

2 mins read
af94a7e5-345b-466e-9c6d-cbb4239af33e
சசிகலா. படம்: தகவல் ஊடகம் -

முக்கிய அறிவிப்பை வெளியிடத் தயாராகும் சசிகலா

திருச்சி: தமது அடுத்­தக்­கட்ட அர­சி­யல் பய­ணம் குறித்து விரை­வில் அறி­விக்க இருப்­ப­தாக சசி­கலா தெரி­வித்­துள்­ளார். இதை­ய­டுத்து அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் உற்­சா­கம் அடைந்­துள்­ள­னர்.

சொத்­துக்­கு­விப்பு வழக்­கில் சிறை­வா­சம் முடிந்த பின்­னர் சசி­கலா தீவிர அர­சி­ய­லில் ஈடு­ப­டு­வார் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. எனி­னும் அதி­முக தலை­மை­யு­ட­னான மோதல் நீடிப்­ப­தால் அவர் இன்­னும் அடக்கி வாசிக்­கி­றார்.

சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் முடி­வ­டைந்து ஓராண்டு ஆகும் நிலை­யில், இன்­னும் ஆன்­மிகப் பய­ணத்­தி­லேயே உள்­ளார் சசி­கலா.

இந்­நி­லை­யில் அவர் சென்­னை­யில் இருந்து விமா­னம் மூலம் திருச்சி சென்­ற­டைந்­தார். அங்கு விமான நிலை­யத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், ஆன்மி­கச் சுற்­றுப்­ப­ய­ணத்தை தாம் நிறைவு செய்­துள்­ள­தா­க­வும் விரை­வில் அர­சி­யல் பய­ணத்­தைத் தொடங்க இருப்­ப­தா­க­வும் கூறி­னார்.

மேலும், அதி­முக பொதுச்­செ­ய­லா­ளர் பதவி தொடர்­பான வழக்­கில் மேல் முறை­யீடு செய்ய தாம் முடிவு செய்­துள்­ள­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், அர­சி­யல் பய­ணம் எப்­போது தொடங்­கும் என்று செய்­தி­யா­ளர் எழுப்­பிய கேள்­விக்கு, 'பொறுத்­தி­ருந்து பாருங்­கள்' என்று அவர் பதி­ல­ளித்­தார்.

மேலும், தம்மை வர­வேற்­ப­தற்­காக விமான நிலை­யத்­தில் கூடிய அம­முக தொண்­டர்­கள் மீது அக்­கட்­சிப் பொதுச்­செ­ய­லா­ளர் தின­க­ரன் நட­வ­டிக்கை எடுக்க வாய்ப்­புள்­ளதா? என்ற கேள்­விக்­குப் பதி­ல­ளிக்க மறுத்­தார் சசி­கலா.

தாம் கோவி­லுக்­குச் செல்ல இருப்­ப­தா­க­வும் இது­போன்ற கேள்­வி­க­ளுக்கு பின்­னர் பதி­ல­ளிப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

சசி­க­லாவை மீண்­டும் அதி­மு­க­வில் சேர்க்­கக் கூடாது என்­ப­தில் அக்­கட்­சி­யின் இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் பழ­னி­சாமி உறு­தி­யாக உள்­ளார்.

எனி­னும், ஓ.பன்­னீர்­செல்­வம், அவ்­வப்­போது சசி­க­லா­வுக்கு ஆத­ர­வாக கருத்து தெரி­வித்து வரு­கி­றார்.

எனவே, சசி­கலா ஏதே­னும் முக்­கிய அறி­விப்பை வெளி­யி­டும்­போது, அதற்கு ஓ.பன்­னீர்­செல்­வம் தரப்­பி­னர் ஆத­ர­வ­ளிக்க வாய்ப்­புள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, கோட­நாடு வழக்கை விசா­ரித்து வந்த நீதி­பதி சஞ்­சய் பாபா மாற்­றப்­பட்­டுள்­ளார். மாவட்ட நீதி­ப­தி­யா­கப் பணி­யாற்றி வந்த அவர், தற்­போது மாவட்ட முதன்மை நீதி­ப­தி­யாக மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளார் என ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.

ஏற்­கெ­னவே கோட­நாடு வழக்கை விசா­ரித்து வந்த நீதி­பதி வட­மலை திடீ­ரென பணி­யிட மாற்­றம் செய்­யப்­பட்­டார். அதன் பின்­னர், சஞ்­சய் பாபா இந்த வழக்கை கடந்த ஓராண்­டாக விசா­ரித்து வந்­தார். இந்­நி­லை­யில் அவ­ரும் பணி­யிட மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளார்.