சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம்

சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம்

2 mins read
78f48843-e9c1-4d76-ba18-543f91035534
போராட்டம் நடத்தும் மாணவர்கள். படம்: ஊடகம் -

சிதம்­பரம்: மாண­வர்­க­ளின் தொடர் போராட்­டம் கார­ண­மாக சிதம்­ப­ரம் ராஜா முத்­தையா மருத்­து­வக் கல்­லூ­ரிக்கு கால­வ­ரை­யற்ற விடு­முறை அளிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஆண்டு இந்­தக் கல்­லூ­ரியை கட­லூர் மாவட்ட அரசு மருத்­து­வக்­கல்­லூ­ரி­யாக அறி­வித்து தமி­ழக அரசு உத்­த­ர­விட்­டது. இத­னால் கல்­விக் கட்­ட­ணங்­கள் பெரு­ம­ளவு குறைக்­கப்­பட்­டன.

இத­னால் நடப்பு கல்­வி­யாண்­டில் முத­லா­மாண்டு மாண­வர்­கள் பலன் அடைந்­துள்­ள­னர். அவர்­க­ளுக்கு அரசு கல்­விக் கட்­ட­ண­மாக ஆண்­டுக்கு ரூ.13 ஆயி­ரம் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் மற்ற மாண­வர்­கள் கல்விக் கட்­ட­ண­மாக ஆண்­டுக்கு ரூ.4 லட்­சம் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

இதற்கு மாண­வர்­கள் மத்­தி­யில் கடும் எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது.

ஒரே கல்­லூ­ரி­யில் இரு வேறான கட்­ட­ணங்­களை வசூ­லிக்­கக்­கூ­டாது என மாண­வர்­கள் தரப்­பில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. மற்ற அர­சுக் கல்­லூ­ரி­களில் கல்விக் கட்­ட­ணம் வசூ­லிப்­பது போல், இங்­கே­யும் கட்­ட­ணம் வசூ­லிக்க வேண்­டும் என்று கூறி அவர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

இந்­தக் கோரிக்­கையை வலி­யு­றுத்தி கடந்த 11ஆம் தேதி முதல் ராஜா முத்­தையா மருத்­து­வக் கல்­லூரி வளா­கத்­தில் இரண்டு, மூன்­றாம் ஆண்டு மாண­வர்­கள் தொடர் போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­ற­னர். நாள்­தோ­றும் வெவ்­வேறு போராட்­டங்­கள் நடை­பெற்று வரு­கிறது. 15 நாள்­க­ளாக போராட்­டம் நீடித்­ததை அடுத்து, முத­லாம் ஆண்டு மாண­வர்­க­ளுக்­கும் பயிற்சி மருத்­து­வர்­கள் தவிர, மற்ற மாண­வர்­க­ளுக்­கும் கால­வ­ரை­யற்ற விடு­முறை விடப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பல்­க­லைக்­க­ழக பதி­வா­ளர் இந்த அறி­விப்பை வெளி­யிட்­டார். இதை­யடுத்து மாண­வர்­கள் உட­ன­டி­யாக பல்­க­லைக்­க­ழக விடு­தி­யில் இருந்து உட­ன­டி­யாக காலி செய்­ய­வும் அவர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

எனி­னும், மாண­வர்­கள் இதை ஏற்­க­வில்லை. விடு­தியை விட்டு வெளி­யேற இய­லாது என்று திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­ய­து­டன், மருத்­து­வ­மனை வளா­கத்­தில் உள்ள வாகன நிறுத்­து­மி­டத்­தில் ஒன்­று­கூடி தொடர்ந்து போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.