சென்னை: தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் (படம்) தொடரப்பட்ட வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளனை விடுவிப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
பேரறிவாளன் தற்போது சிறை விடுப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 9ஆம் தேதி பிணை வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன், தம்மை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
தம்மை விடுவிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அதன் பிறகும்கூட தமிழக ஆளுநர் இது தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துகிறார் என்றும் அவரது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது. இதையடுத்து, கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கும் மாநில ஆளுநர் செயல்பட்டால் கூட்டாட்சிக்கு பாதகம் ஏற்படும் என்றனர்.
"அமைச்சரவையின் பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப மாநில ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பது குறித்து அடுத்த ஒரு வாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்.
"யார் விடுதலை செய்வது என்கிற குழப்பம் நீடிப்பதால் பேரறிவாளனை ஏன் நீதிமன்றமே விடுவிக்கக் கூடாது? பேரறிவாளனை விடுவிப்பதே இந்த வழக்கிற்கு ஒரே தீர்வு," என மத்திய அரசுக்கு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

