சென்னை அரசு மருத்துவமனையில் தீ விபத்து; பெரும் பதற்றம்

சென்னை அரசு மருத்துவமனையில் தீ விபத்து; பெரும் பதற்றம்

2 mins read
e6f14e25-9e1d-440b-830c-ac0cf3c316f0
தீ விபத்தின் போது நரம்பியல் பிரிவு இயங்கி வந்த கட்டடத்தில் சிக்கிய நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்களை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி பத்திரமாக மீட்டனர். பின்னர் தீயையும் அணைத்தனர்.படம்: ஊடகம் -

உயிர்வாயு உருளைகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின; உயிரிழப்புகள் இல்லை

சென்னை: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்­து­வ­ம­னை­யில் ஏற்­பட்ட தீ விபத்­தால் சென்­னை­யில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

இதை­ய­டுத்து, தீய­ணைப்­புத் துறை­யி­னர் பல மணி­நே­ரம் போராடி தீயை அணைத்­த­னர். மேலும், பல நோயா­ளி­களை பத்­தி­ர­மாக மீட்­ட­னர்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்­து­வ­மனை வளா­கத்­தின் பின்­பகு­தி­யில் உள்ள பழைய கட்­ட­டம் ஒன்­றில் நரம்­பி­யல் பிரிவு செயல்­பட்டு வரு­கிறது.

அதன் அருகே, 'ஸ்கேன்' மையங்­கள் இயங்கி வரு­கின்­றன. மற்­றொரு சிறிய கட்­ட­டத்­தில் அறுவை சிகிச்­சைக்­குத் தேவை­யான பொருள்­களும் உயிர்­வாயு உரு­ளை­களும் வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

இந்­நி­லை­யில், நேற்று காலை நரம்­பி­யல் பிரிவு செயல்­படும் கட்­ட­டத்­தில் 11 மணி­ய­ள­வில் திடீ­ரென தீப்­பி­டித்­தது. அடுத்த சில நிமி­டங்­களில் பெரும் புகை­யு­டன் வந்த தீ, மள­ம­ள­வென பர­வத் தொடங்­கி­யது.

அந்­தக் கட்­ட­டம் முழு­வ­தை­யும் புகை சூழ, தீய­ணைப்­புத் துறை­யி­ன­ருக்கு தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது. அவர்­கள் வந்து சேர்­வ­தற்­குள் மருத்­து­வ­மனை ஊழி­யர்­கள், நரம்­பி­யல் பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த நோயா­ளி­களை மீட்­ட­னர்.

எனி­னும், நூற்­றுக்­கும் அதி­க­மான பணி­யா­ளர்­களும் நோயா­ளி­களும் கட்­ட­டத்­துக்­குள் சிக்­கிக் கொண்­ட­னர்.

எனி­னும் உயிர்­வாயு உரு­ளை­கள் வைக்­கப்­பட்­டி­ருந்த பகு­திக்­கும் தீ பர­வி­ய­தால் அவை ஒன்­றன்­பின் ஒன்­றாக வெடித்­துச் சித­றத் தொடங்­கின. இதை­ய­டுத்து பெரும் பதற்­றம் நில­வி­யது.

இதற்­கி­டையே, அங்கு விரைந்து வந்த நான்கு தீய­ணைப்பு வாக­னங்­கள் தீய­ணைக்­கும் பணி­யில் ஈடு­பட்­டன. தீய­ணைப்பு வீரர்­கள் கட்­ட­டத்­தில் சிக்­கி­ய­வர்­களை மீட்­கும் பணி­யைத் தொடங்­கி­னர்.

கட்­ட­டத்­தில் சிக்­கிய பலர், கட்­ட­டத்­தின் மொட்டை மாடி­யில் தஞ்­ச­ம­டைந்து, அங்­கி­ருந்து உதவி கேட்டு கூச்­ச­லெ­ழுப்­பி­னர். மிகப்­பெரிய ஏணி­யைக் கொண்டு அவர்­கள் அனை­வ­ரும் மீட்­கப்­பட்­ட­னர்.

இதற்­கி­டையே, அங்கு விரைந்து வந்த மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யன் மீட்­புப் பணி­களை துரி­தப்­ப­டுத்­தி­னார்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், இந்த தீ விபத்­தில் உயி­ரி­ழப்பு ஏதும் ஏற்­ப­ட­வில்லை என்­றார். மேலும், தீ விபத்து ஏற்­பட்ட கட்­ட­டத்­தில் இயங்­கும் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் இருந்து மூன்று நோயா­ளி­கள் உட்­பட 32 பேர் மீட்­கப்­பட்­ட­தாக தெரி­வித்­தார்.