நடுச்சாலையில் குடுமிப்பிடிச் சண்டை போட்ட கல்லூரி மாணவிகள்

நடுச்சாலையில் குடுமிப்பிடிச் சண்டை போட்ட கல்லூரி மாணவிகள்

1 mins read
3267801f-20e7-4a36-9732-13453975faa3
-

சென்னை: கல்­லூரி மாண­வி­கள் குடு­மிப்­பி­டிச் சண்­டை­யில் ஈடு­பட்­ட­தால் சென்னை புது­வண்­ணா­ரப்­பேட்டை பகு­தி­யில் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

அங்கு இயங்கி வரும் அரசு கலை, தொழிற் கல்வி கல்­லூ­ரி­யில் படித்து வரும் மாண­வி­கள் பலர் அங்­குள்ள பேருந்து நிலை­யத்­தில் காத்­தி­ருந்­த­னர்.

அப்­போது இரு குழுக்­க­ளா­கச் செயல்­பட்டு வரும் மாண­வி­க­ளுக்கு இடையே அங்கு திடீ­ரென வாக்­கு­வாதம் மூண்­டது. ஒரு­வ­ரை­யொ­ரு­வர் மோச­மான வார்த்­தை­க­ளால் திட்டிக்­கொண்­ட­னர்.

இந்­நி­லை­யில் திடீ­ரென்று மாண­வி­கள் குடு­மிப்­பிடி சண்­டை­யில் ஈடு­பட்­ட­தால் அப்­ப­கு­தி­யில் இருந்த பொது­மக்­கள் அதிர்ச்சி அடைந்­த­னர். அவர்­களில் சிலர் தலை­மு­டி­யைப் பிடித்து இழுத்­தும், கன்­னத்­தில் அறைந்­தும் சண்­டை­யிட்ட மாண­வி­களை முடிந்­த­வரை விலக்­கி­விட்­ட­னர்.

இந்­நி­லை­யில் தக­வல் அறிந்த காவல்­து­றை­யி­னர் சம்­பவ இடத்­துக்கு விரைந்து வந்­த­னர். மாண­வி­களை கடு­மை­யாக எச்­ச­ரித்த காவல்­துறை அதி­காரி மீண்­டும் இது­போன்று நடந்து கொண்­டால் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றார்.

மாண­வி­க­ளின் குடு­மிப்­பிடிச் சண்­டையை பொது­மக்­களில் ஒரு­வர் தமது கைபே­சி­யில் காணொ­ளி­யா­கப் பதிவு செய்து சமூக ஊட­கங்­களில் பதி­விட்­டதை அடுத்து, அது பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கிறது. இதற்­கி­டையே, சம்­பந்­தப்­பட்ட மாண­வி­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என பலர் சமூக ஊட­கங்­களில் பதி­விட்­டுள்­ள­னர். இது விவா­தப்­பொ­ரு­ளாகி உள்­ளது.