தொற்று மையமாக உருவெடுத்த ஐஐடி

தொற்று மையமாக உருவெடுத்த ஐஐடி

1 mins read
3675c6b1-049f-446b-8d45-44afdb687d81
-

சென்னை: ஐஐடி கல்வி நிலை­யத்­தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

இதன் மூலம் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 171ஆக அதி­க­ரித்­துள்­ளது. இதை­ய­டுத்து, தமி­ழ­கத்­தின் புதிய கொரோனா பர­வல் மைய­மாக சென்னை ஐஐடி உரு­வெ­டுத்­துள்­ளது.

தமி­ழ­கத்­தில் கொரோனா பாதிப்­பின் அன்­றாட எண்­ணிக்கை நூற்­றுக்­கும் குறை­வா­கவே பதி­வாகி வரு­கிறது.

இந்­நி­லை­யில், நாட்­டின் உயர் கல்வி நிலை­யங்­களில் ஒன்­றான ஐஐ­டி­யில் திடீ­ரென கொரோனா தொற்று பாதிப்பு அதி­க­ரித்து வருகிறது.

எனி­னும், அங்கு பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் யாருக்­கும் கொரோ­னா­வின் புதிய வகை பாதிப்பு இல்லை என்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

மேலும், ஏற்­கெ­னவே பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் தொற்­றில் இருந்து குண­ம­டைந்து வரு­வ­தா­க­வும் சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

ஐஐடி மையத்­தில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்­தா­லும் கவ­லைப்­ப­டத் தேவை­யில்லை என்று குறிப்­பிட்­டுள்ள அதி­கா­ரி­கள், தொற்­றுப்­ப­ர­வல் ஓரிரு நாள்­களில் கட்­டுக்­குள் வரும் என்று கூறி­யுள்­ள­னர்.

இதற்­கி­டையே, ஐஐ­டி­யில் பாதிக்­கப்­பட்ட பெரும்­பா­ல­னோ­ருக்கு 'ஒமைக்­ரான் பிஏ2' வகை தொற்று இருப்­ப­தா­க­வும் இது வேக­மாக பர­வக்­கூ­டி­யது என்­ப­தால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ளது என்­றும் ஒரு­த­ரப்­பி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே, சென்­னை­யில் நேற்று முன்­தி­னம் 59 பேருக்கு தொற்று பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.