குட்கா வியாபாரிகள் 6,319 பேர் கைது; வங்கிக் கணக்குகள் முடக்கம் தமிழகம் முழுவதும் 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது

குட்கா வியாபாரிகள் 6,319 பேர் கைது; வங்கிக் கணக்குகள் முடக்கம் தமிழகம் முழுவதும் 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது

2 mins read
7f97f2a6-9761-4f1b-8b54-5ef81f1c4ae4
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கடந்த சில வாரங்­க­ளா­கச் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரும் 'ஆப­ரே­ஷன் கஞ்சா 2.0' நட­வடிக்கை மூலம் இது­வரை 2,423 பேர் கைதாகி உள்­ள­னர் என்று தமிழக காவல்­துறை அறி­வித்­துள்­ளது.

கடந்த 31 நாள்­களில் இவர்­கள் அனை­வ­ரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக காவல்­து­றை­யின் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த சில ஆண்­டு­க­ளாக தமி­ழ­கத்­தில் போதைப் பழக்­கத்­துக்கு அடி­மை­யா­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது. இதை­ய­டுத்து, போதைப் பாக்­கு­கள் (குட்கா), கஞ்சா ஆகி­ய­வற்றை விற்­போர் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு தமி­ழக காவல்­துறை தலை­வர் டிஜிபி சைலேந்­திர பாபு உத்­த­ரவு பிறப்­பித்­தார்.

இந்த நட­வ­டிக்­கைக்கு 'ஆப­ரே­ஷன் கஞ்சா 2.0' என்று பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது.

கடந்த ஒரு மாத கால­மாக, தமி­ழ­கம் முழு­வ­தும் உள்ள காவல்­துறை­யி­னர் அதி­ரடி நட­வடிக்­கை­களை மேற்­கொண்டு கஞ்சா வியா­பா­ரி­களை வளைத்­துப் பிடித்து வரு­கின்­ற­னர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­டம் இருந்து இது­வரை 3,562 கிலோ கஞ்சா பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதில் திண்­டுக்­கல் மாவட்­டத்­தில் 10 கஞ்சா வியா­பா­ரி­க­ளின் வங்கிக் கணக்­கு­கள் முடக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­போல் மதுரை, தேனி உள்­ளிட்ட இடங்­க­ளி­லும் கஞ்சா வியா­பா­ரி­க­ளின் வங்கிக் கணக்­கு­கள் முடக்­கப்­பட்­டுள்­ளது என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதேபோல் தமி­ழ­கம் முழு­வ­தும் மேற்­கொள்­ளப்­பட்ட அதி­ரடி நட­வ­டிக்­கை­க­ளின் மூலம் குட்கா வியா­பா­ரி­களும் கைது செய்­யப்­பட்டு வரு­கின்­ற­னர்.

இது­வரை 6,319 குட்கா வியா­பா­ரி­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர்­க­ளி­டம் இருந்து 44.9 டன் குட்கா பொருள்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

மேலும், விற்­ப­னைக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட 113 வாக­னங்­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக காவல்­துறை தெரி­வித்­துள்ள நிலை­யில், இந்த கைது நட­வ­டிக்கை மேலும் நீடிக்­கும் எனத் தெரி­கிறது.

குறிப்­பாக பள்ளி, கல்­லூ­ரி­கள் அருகே போதைப்­பொ­ருள்­களை ரக­சி­ய­மாக விற்று வந்­த­வர்­க­ளைக் குறி­வைத்து நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கிறது.

மேலும், போதை மாத்­தி­ரை­களை விற்­கும் குழுக்களைக் கண்­கா­ணித்து, அதில் ஈடு­பட்­டுள்ள அனை­வ­ரை­யும் மொத்­த­மாக கைது செய்­யும் நட­வ­டிக்­கை­யும் தீவி­ர­மடைந்து உள்­ள­தாக காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

காவல்துறையின் இந்தத் தொடர் அதிரடி நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.