கோவை: கோவை மாவட்டம், திம்மன்நாயக்கன்பாளையம் கிராம மக்கள் ஈக்கள் தொல்லையால் ஊரையே காலி செய்துவிடும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
'நான் ஈ' திரைப்படத்தில் கிராபிக்சில் வடிவமைக்கப்பட்ட ஒரு ஈயின் தொல்லை தாங்கமுடியாமல் வில்லன் தூங்கமுடியாமல், சாப்பிடமுடியாமல் ஓடி ஒளிவதைப் பார்த்திருப்போம்.
இதேபோல், திம்மன்நாயக்கன்பாளையத்தில் பல்லாயிரக்கணக்கான ஈக்கள் படையெடுப்பால் அந்தக் கிராம மக்கள் அனைவரும் சாப்பிட முடியாமல் தூங்கமுடியாமல் தவித்து வருகின்றனர்.
சிலர் ஊரை காலி செய்துவிட்டுச் சென்ற நிலையில், பலர் சொந்த வீட்டை விட்டுச் செல்ல முடியாமலும் ஈ தொல்லையில் இருந்து விடுபட முடியாமலும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
"புதிய வீட்டு கிரகப்பிரவே சத்துக்கு இவ்வளவு ஈக்கள் வரும் என்று எங்களுக்குத் தெரியாது. இந்த நிகழ்வுக்கு வந்தவர்கள் சாப்பிடாமலேேய சென்றுவிட்டனர். இதனால் எங்களுக்கு பெரிய மன உளைச்சல் ஏற்பட்டது. தெரியாமல் இந்த ஊருக்கு வந்துவிட்டோமா என கவலை ஏற்பட்டது.
"எப்போதும் வீட்டில் சண்டையாகத்தான் உள்ளது. இங்குள்ளவர்களுக்கு ஒரு நிம்மதியான மனநிலைமையே இல்லை," என்று இங்கு வசிக்கும் சித்ரா கூறியுள்ளார்.
மரம், செடிகள், தெருக்கள், வீடுகள் முழுவதும் பரவி இருக்கும் ஈக்கள் சாப்பிடும்போதும் தேநீர் அருந்தும்போதும் மொய்யப்பதால் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும் கிராம மக்கள் கூறினர்.
திம்மன்நாயக்கன் பாளையத்தைச் சுற்றி இயங்கும் கோழிப் பண்ணைகளும் திறந்த வெளியில் கொட்டப்படும் கோழிப் பண்ணை கழிவுகளுமே ஈக்கள் படையெடுக்க முக்கிய காரணம் என மக்கள் கூறுவதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈ தொல்லையில் இருந்து விடுபட அரசு நடவடிக்கை எடுக்காவிடில் குடும்பத்ேதாடு ஊரைக் காலி செய்துவிட்டு வெளியேற முடிவெடுத்துள்ளதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.

