நிலக்கரி பற்றாக்குறை: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பணி பாதிப்பு

2 mins read
0e5296a6-4db9-48c4-b4e4-1a1eaa944ea4
-

சென்னை: தூத்­துக்­குடி அனல்­மின் நிலை­யத்­தில் உள்ள நான்கு மின் உற்­பத்­திப் பிரி­வு­களில் பணி­கள் முடங்கி உள்­ளன. போது­மான நிலக்­கரி கையி­ருப்­பில் இல்­லா­ததே இந்த முடக்­கத்­துக்கு கார­ணம் எனக் கூறப்­ப­டு­கிறது.

தூத்­துக்­குடி அனல்­மின் நிலை­யத்­தில் தலா 210 மெகா­வாட் மின்­சா­ரம் உற்­பத்தி திறன் கொண்ட ஐந்து மின்­ உற்­பத்தி இயந்­தி­ரங்­கள் இயங்கி வரு­கின்­றன. இதன்­மூ­லம் நாளொன்­றுக்கு 1,050 மெகா­வாட் மின்­சா­ரம் இங்கு உற்­பத்தி செய்­யப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், நாடு முழு­வ­தும் நில­வும் நிலக்­கரி தட்­டுப்­பாடு தூத்­துக்­குடி அனல்­மின் நிலைய பணி­க­ளை­யும் பாதித்­துள்­ளது.

இங்­குள்ள நான்கு அல­கு­க­ளின் பணி­கள் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. ஒரே­யொரு அல­கில் மட்­டும் பணி­கள் நடை­பெற்று வரு­கிறது.

கடந்த சில தினங்­க­ளா­கவே மின் உற்­பத்தி பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் உட­ன­டி­யாக நிலக்­கரி வரத்தை அதி­க­ரிக்கவேண்­டும் என்­றும் அனல்­மின் நிலைய அதி­கா­ரி­கள் அர­சி­டம் தெரி­வித்­துள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் கடந்த சில தினங்­க­ளா­கப் பல்­வேறு பகு­தி­களில் அறி­விக்­கப்­ப­டாத மின்­வெட்டு நிலவு­வ­தாக புகார்­கள் எழுந்­துள்­ளன.

மத்­திய மின் தொகுப்­பில் இருந்து தமி­ழ­கத்­துக்கு வர வேண்­டிய மின்­சா­ரம் வந்து சேரா­ததே மின் வெட்­டுக்­குக் கார­ணம் என தமி­ழக அரசு விளக்­கம் அளித்­துள்­ளது.

மேலும், நிலக்­கரி பற்­றாக்­கு­றைக்குத் தீர்­வு­காண உரிய நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் மின்­துறை அமைச்­சர் செந்­தில் பாலாஜி தெரி­வித்­தி­ருந்­தார்.

இதை­ய­டுத்து, மின் விநி­யோ­கம் சீர­டைந்­துள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார்.

இதற்­கி­டையே, ஒடிசா மாநி­லத்­தில் உள்ள ஹின்­குலா உட்­பட ஐந்து சுரங்­கங்­களில் இருந்து தமி­ழக மின் வாரி­யத்­திற்கு 26 கோடி கிலோ நிலக்­க­ரியை ஒதுக்­கீடு செய்­துள்­ள­தாக மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது.