தீ விபத்தில் சேதமடைந்த சென்னை அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம்

தீ விபத்தில் சேதமடைந்த சென்னை அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம்

1 mins read
064be84b-dd31-4efc-be79-8e7970cd3533
-

சென்னை: தீ விபத்­தில் சேதம் அடைந்­துள்ள சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்­து­வ­ம­னைக்கு புதிய கட்­ட­டம் கட்­டப்­படும் என மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார். சேத­ம­டைந்த கட்­ட­டம் இடிக்­கப்­படும் என்­றும் சட்­டப்­பே­ர­வை­யில் நேற்று அவர் அறி­வித்­தார்.

நேற்று முன்­தி­னம் ராஜீவ் காந்தி மருத்­து­வ­ம­னை­யில் ஏற்­பட்ட தீ விபத்து குறித்து சட்­டப்­பே­ர­வை­யில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்­மா­னம் கொண்டு வரப்­பட்­டது.

அதற்­குப் பதி­ல­ளித்­துப் பேசிய அமைச்­சர் மா.சுப்­பி­ரம­ணி­யன், தீ விபத்து ஏற்­பட்ட கட்­ட­டத்­தில் 128 பேர் சிகிச்சை பெற்று வரு­வ­தா­க­வும் விபத்து குறித்து அறிந்­த­தும் முதல்­வர் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க உத்­த­ர­விட்­ட­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

"சம்­ப­வம் நடை­பெற்ற பத்து நிமி­டங்­க­ளுக்­குள்­ளா­கவே நான்கு தீய­ணைப்பு வாக­னங்­கள் விபத்து பகு­திக்­குச் சென்று மீட்­புப் பணி­கள் தொடங்­கி­விட்­டன.

"ஊட­க­வி­ய­லா­ளர்­களும் நேர­டி­யாக நோயா­ளி­களை மீட்­ட­னர். அரசு மேற்­கொண்ட அதி­தீ­விர நட­வ­டிக்கை கார­ண­மாக உயி­ரி­ழப்பு ஏதும் இல்லை," என அமைச்­சர் மா.சுப்­பி­ர­­ம­ணி­யன் கூறினார்.