புதுடெல்லி: சென்னைக்கான இரண்டாவது விமான நிலையத்தை செங்கல்பட்டு மாவட்டம், பரந்தூர் அல்லது பன்னூரில் அமைப்பதற்கு சாத்தியம் இருப்பதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
இதுகுறித்து விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியிருந்தார். அவருக்குத் பதிலளித்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில், "சென்னையின் 2ஆவது விமான நிலையத்துக்கு மாநில அரசு திருப்போரூர், பரந்தூர், படாலம், பன்னூர் ஆகிய நான்கு இடங்களை அடையாளப்படுத்தியது. இவற்றை ஆய்வு ெசய்ததில் பரந்தூர் மற்றும் பன்னூர் ஆகிய இரு இடங்கள் வான்வெளியின் தன்மைக்கு ஒப்பீட்டளவில் மிகவும் சாத்தியமானதாக உள்ளன. குறிப்பாக, இயற்கைத் தடைகளற்றவையாக உள்ளன. இருப்பினும், மனிதத் தடைகள் உள்ளன. ஏரிகள், தொழிற்சாலைகள் வெளியிடும் புகை போன்ற இடையூறுகள் விமானப் போக்குவரத்துக்குத் தடையாக இருப்பவை. இது தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கோரப்பட்டு உள்ளது. விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும்," என்று கூறியுள்ளார்.

