சென்னை: பிரபல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த நடிகை சித்ரா (படம்), கடந்த 2020ம் ஆண்டு திடீரென தற்கொலை செய்துகொண்டார்.
இந்த விவகாரத்தில், அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு, பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில், தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஹேமந்த் புகார் அளித்துள்ளார்.
அதில், தமது மனைவி சித்ராவின் தற்கொலை பின்னணியில், பலம் வாய்ந்த அரசியல் புள்ளிகள் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். அவர்களிடமிருந்த ஒரு கும்பல் தம்மைப் பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"சித்ரா மரணத்திற்கு காரணமான அரசியல் புள்ளிகளால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. அவர்கள் என் உயிருக்குக் குறிவைத்து உள்ளனர். எனக்கு பாதுகாப்பு தேவை. உயிருக்குப் பயந்து வழக் கறிஞர் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளேன்," என்று கூறியுள்ளார்.

