ஒரே நாளில் 2,000 ஓட்டுநர்கள் சிக்கினர்

ஒரே நாளில் 2,000 ஓட்டுநர்கள் சிக்கினர்

1 mins read
d9239495-79e3-4d6d-88ae-27c818e97f89
வாகனச் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர். படம்: ஊடகம் -

சென்னை: சிறப்பு வாக­னத் தணிக்கை மூலம் சென்­னை­யில் ஒரே நாளில் 2,000க்கும் மேற்­பட்ட வாகன ஓட்­டு­நர்­கள் பிடி­பட்­ட­னர். சென்­னை­யில் போக்­கு­வ­ரத்து விதி­மீ­றல்­கள் மற்­றும் போக்­கு­வ­ரத்து நெரி­சலை கட்­டுப்­ப­டுத்­த­வும் விபத்­து­களை குறைக்­க­வும் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை அதி­கா­ரி­கள் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

அந்த வகை­யில் சென்னை பெரு­ந­க­ரம் முழு­வ­தும், நேற்று ஒரு நாள் சிறப்பு வாக­னத் தணிக்கை மேற்­கொண்­ட­னர். இந்த நட­வ­டிக்­கை­யில், விதி­க­ளுக்கு முர­ணாக வாக­னம் ஓட்­டி­யது தொடர்­பாக மூன்று மண்டலங்களில் 1,595 வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. அதி­வே­க­மாக வாக­னம் ஓட்­டி­யது தொடர்­பாக மொத்­தம் 403 வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. அதே­போல வேக­மாக வாக­னம் ஓட்­டி­யதாக 96 வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. இந்த சிறப்பு வாக­னத் தணிக்கை நட­வ­டிக்­கை­கள் தொடரும் என­ போக்­கு­வ­ரத்து காவல்­துறை கூறியது.