மனைவி இறந்துவிட்டதாக அறிவித்து இரண்டாவது திருமணம்

மனைவி இறந்துவிட்டதாக அறிவித்து இரண்டாவது திருமணம்

1 mins read
3893df73-7397-4b17-b84f-4595fcf2cf7d
மனைவிக்கு 'கண்ணீர் அஞ்சலி' சுவரொட்டி வெளி யிட்ட பாலகிருஷ்ணன். படங்கள்: சமூக ஊடகம் -

மதுரை: மதுரை மாவட்­டம் அலங்­கா­நல்­லூர் அருகே உள்ள அழ­கா­புரியைச் சேர்ந்­த­வர் மோனிஷா, 23. இவ­ருக்­கும் சிவ­கங்கை மாவட்­டம் கண்­டாங்­கி­பட்டி பகு­தியைச் சேர்ந்த பால­கி­ருஷ்­ணன், 30, என்­ப­வ­ருக்­கும் ம­ண­மாகி 3 வயது ஆண் குழந்தை உள்­ளது.

நாள்­தோ­றும் குடித்­து­விட்டு அடித்து துன்­பு­றுத்­து­வ­தாக கணவர் மீது மோனிஷா அளித்த புகா­ரைத் தொடர்ந்து காவல்

­து­றை­யி­னர் தலை­யிட்டு பால­கி­ருஷ்­ணனை எச்­ச­ரித்து எழுதி வாங்கினர்.

மீண்­டும் தம்­ப­தி­யி­டையே சண்டை ஏற்­பட்ட நிலை­யில், மோனிஷா கோபித்­துக்­கொண்டு மக­னு­டன் தாய் வீட்­டுக்­குச் சென்றுவிட்டார்.

திரும்பி வராத மனை­வி இறந்­து­விட்­ட­தா­கக் கூறி கண்­ணீர் அஞ்­சலி சுவ­ரொட்டி தயா­ரித்த பால­கி­ருஷ்­ணன், அதை சமூக ஊட­கங்­களில் பதி­விட்­டார்.

அதனைக் காட்டி உறவினர்களை நம்ப வைத்து உற­வுக்­கா­ரப் பெண் ஒருவரை 2வது திரு­ம­ணம் செய்து அதை பேஸ்­புக்­கி­லும் பதி­விட்­டுள்­ளார் அவர்.

இதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்த மோனிஷா, சம­ய­நல்­லூர் மக­ளிர் காவல்

­நி­லை­யத்­தில் புகார் அளித்­துள்­ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்­து­றை­யி­னர் விசா­ர­ணை­ நடத்தி வருகின்றனர்.