'ஒவ்வொரு பெண்ணும் பட்டம் பெறவேண்டும்'

'ஒவ்வொரு பெண்ணும் பட்டம் பெறவேண்டும்'

2 mins read
5cf77199-7ee2-4d65-9e3e-cb407914fa07
-

தேனி: தமி­ழ­கத்­தில் உள்ள ஒவ்­வொரு பெண்­ணும் பட்­டம் பெற வேண்­டும் என்­பதே அர­சின் எண்­ணம் என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

தேனி­யில் நடை­பெற்ற அரசு விழா­வில் பேசிய அவர், பெண் கல்­விக்கு எதி­ரான அத்­தனை தடை­க­ளை­யும் அரசு தகர்த்­தெ­றி­யும் என்­றார்.

மேலும், தேர்­த­லின்­போது அளிக்­கப்­பட்ட அனைத்து வாக்­கு­று­தி­க­ளை­யும் திமுக அரசு நிறை­வேற்­றும் என்­றும் முதல்­வர் உறுதி அளித்­தார்.

நேற்று நடை­பெற்ற அரசு விழா­வில் அவர், 11,000 பேருக்கு நலத்­திட்ட உத­வி­களை வழங்­கி­னார். மேலும் முடி­வுற்ற திட்­டங்­க­ளை­யும் தொடங்கி வைத்­தார்.

"பெண்­கள் முறை­யான கல்வி­யைப் பெற்­றால் வாழ்க்­கை­யில் எத்­தனை தடை­களை வேண்­டு­மா­னா­லும் எதிர்­கொள்ள முடி­யும்.என­வே­தான் பெண் கல்­வியை ஊக்­கப்­ப­டுத்­தும் வித­மாக மூவ­லூர் ராமா­மிர்­தம் அம்­மை­யார் திட்­டத்­தின் கீழ் கல்­லூரி மாண­வி­க­ளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்­கப்­பட உள்­ளது. இதன் மூலம் ஆறு லட்­சம் மாண­வி­கள் பய­ன­டை­வார்­கள்," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.

கொரோ­னா­வால் பெற்­றோரை இழந்த குழந்­தை­க­ளின் கல்வி பாதிக்­கப்­ப­டக்­கூ­டாது என்­ப­தற்­காக இல்­லம் தேடி கல்வி திட்­டம் தொடங்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"மக்­க­ளுக்கு சேவை செய்­வ­தற்கே நேரம் போது­மா­ன­தாக இல்லை. எனவே திமுக அரசு குறித்து எழும் விமர்­ச­னங்­க­ளுக்கு பதில் தர விரும்­ப­வில்லை.

"மறைந்த முதல்­வர் எம்­ஜி­ஆ­ரி­டம் இருந்த அர­சி­யல் நாக­ரி­கம் தற்­போது உள்­ள­வர்­க­ளி­டம் இல்லை," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.

133 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் மூலம் தமி­ழ­கத்­துக்கு ரூ.64 ஆயி­ரம் கோடி முத­லீ­டு­கள் ஈர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், இதன்­மூ­லம் இரு­நூ­றா­யி­ரம் இளை­யர்­க­ளுக்கு வேலை வாய்ப்­பு­கள் கிடைக்­கும் என்­றார்.

"வளர்ச்சி என்­பதை அனை­வ­ருக்­கும் சாத்­தி­யப்­ப­டுத்­து­வதே திரா­விட முன்­மா­திரி. இது­தான் எங்­க­ளு­டைய வழக்­கம். இதுவே நல்ல ஆட்­சிக்­கான இலக்­க­ணம்.

"அத­னால்­தான் அர­சின் அனைத்து திட்­டங்­களும் மக்­க­ளைச் சென்­ற­டை­யும் வகை­யில் ஒவ்­வொரு திட்­டத்­தை­யும் பார்த்து பார்த்து செயல்­ப­டுத்தி வரு­கி­றோம். இந்தப் பணி தொடர்ந்து நடைபெறும்," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.