சிவகங்கை: ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவத் திருவிழாவில் ஐந்தாயிரம் பேர் பங்கேற்று கறி விருந்து உண்டு மகிழ்ந்தனர்.
சிவகங்கை அருகே உள்ள திருமலைக் கிராமத்தில் ஆண்டுதோறும் இந்த விருந்து நிகழ்வு நடைபெற்று வருகிறது.
சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரும்பாலான ஆண்கள் இதில் பங்கேற்று கருப்பசாமிக்கு கறிவிருந்தை படையலிட்டு, பிறகு அதை உ ண்டு மகிழ்வர்.
அதன்படி இந்த ஆண்டும் திருமலை கிராமத்தில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது. நேற்று அங்கு கண்மாய் கரையில் உள்ள காவல் தெய்வமான மடை கருப்பசாமிக்கு ஐநூறுக்கும் மேற்பட்ட ஆடுகள் பலிகொடுக்கப்பட்டன. பின்னர் அதிகாலை வேளையிலேயே கறி விருந்து தயாரிக்கப்பட்டது. இதற்காகப் பிரம்மாண்டப் பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
விருந்து தயாரானதும் கருப்பசாமிக்கு சிறப்புப் பூசைகள் நடத்தப்பட்டு, பின்னர் உணவு பரிமாறப்பட்டது. திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் அசைவ உணவை ஆர்வத்துடன் உண்டு மகிழ்ந்தனர்.

