மூளைச்சாவு அடைந்த இளையரின் இதயம்: 84 நிமிடங்களில் சென்னைக்கு கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்

மூளைச்சாவு அடைந்த இளையரின் இதயம்: 84 நிமிடங்களில் சென்னைக்கு கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்

2 mins read
dec6b333-3407-4547-aa29-1aa7b819164a
-

திருப்­பத்­தூர்: மூளைச்­சாவு அடைந்­த­வ­ரின் இத­யத்தை வேலூ­ரில் இருந்து 84 நிமி­டங்­களில் சென்­னைக்கு கொண்டு வந்த ஆம்­பு­லன்ஸ் ஓட்­டு­ந­ருக்­குப் பாராட்டு­கள் குவி­கின்­றன.

திருப்­பத்­தூர் மாவட்­டத்­தைச் சேர்ந்த கட்­ட­டத் தொழி­லா­ளி­யான 21 வயது தின­க­ரன் என்­ப­வர் இரு தினங்­க­ளுக்கு முன்பு விபத்­தில் சிக்­கிப் படு­கா­யம் அடைந்­தார்.

இதை­ய­டுத்து வேலூ­ரில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை அளிக்­கப்­பட்டு வந்த நிலை­யில், அவர் மூளைச்­சாவு அடைந்­த­தாக மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­னர்.

இத­னால் மன­மு­டைந்து போனா­லும் தன் மக­னின் உடல் உறுப்­பு­களைத் தான­மாக வழங்க அவ­ரது பெற்­றோர் முடிவு செய்­த­னர்.

அதன்­படி தின­க­ர­னின் இத­யத்தை சென்­னை­யில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வந்த 41 வயது ஆடவருக்குப் பொருத்­து­வது என முடி­வா­னது. அவ­ரது கல்­லீ­ரல், சிறு­நீ­ர­கங்­கள், கண்­கள் ஆகிய உறுப்புகள் வேலூ­ரில் உள்ள மற்­றொரு தனி­யார் மருத்­து­வ­மனைக்கு வழங்­கப்­பட்­டன.

இதை­ய­டுத்து வேலூ­ரில் இருந்து அவ­ரது இத­யத்தை சென்னைக்கு ஆம்­பு­லன்ஸ் வாக­னம் மூலம் கொண்டு செல்ல ஏற்­பா­டு­கள் நடை­பெற்­றன.

மாநில காவல்­துறை, போக்­கு­வரத்­துத் துறை ஆகி­ய­வற்­றுக்கு முன்­கூட்­டியே தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது.

நேற்று முன்­தி­னம் மாலை 3.10 மணி­ய­ள­வில் தின­க­ர­னின் இத­யம் வைக்­கப்­பட்ட பெட்­டி­யு­டன் சென்னையை நோக்­கிப் புறப்­பட்ட ஆம்­பு­லன்ஸ் வாக­னத்தை ஓட்­டு­நர் வேல்­மு­ரு­கன் என்­ப­வர் ஓட்­டி­னார். வழி­யெங்­கும் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லைக் கட்­டுப்­ப­டுத்த உரிய ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

இத­னால் வேலூ­ரில் இருந்து புறப்­பட்டு 84ஆவது நிமி­டத்­தில் சென்னை வந்­த­டைந்­தார் வேல்­முரு­கன். இது­கு­றித்த தக­வல் சமூக ஊட­கங்­களில் வெளி­யா­னதை அடுத்து அவ­ருக்­குப் பாராட்­டு­கள் குவி­கின்றன.