தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கச்சத்தீவு செல்ல அனுமதிச்சீட்டு: ரத்து செய்ய பாஜக வலியுறுத்து

2 mins read
ad86fd4e-341c-4c49-abee-0054151acda1
-

சென்னை: கச்­சத்­தீ­வில் உள்ள அந்­தோ­ணி­யார் ஆல­யத்­துக்­குச் செல்ல தமி­ழக மக்­கள் அனு­ம­திச்­சீட்டு பெற வேண்­டும் என்ற நடை­மு­றையை ரத்து செய்ய வேண்­டும் என தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை வலி­யு­றுத்தி உள்­ளார்.

அண்­மை­யில் இலங்கை சென்று திரும்­பி­யுள்ள அவர், தமி­ழக மீன­வர்­க­ளி­டம் இருந்து இலங்­கைக் கடற்­படை பறி­மு­தல் செய்த பட­கு­களை உட­ன­டி­யாக விடு­விக்க வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசும்­போதே அவர் இந்த கோரிக்­கை­களை முன்­வைத்­தார்.

இலங்கை கடல் எல்­லைக்­குள் நுழைந்­த­தா­கக் கூறி, தமி­ழக மீன­வர்­கள் மீது கடும் நட­வ­டிக்­கையை எடுப்­ப­தைக் கைவிட்டு, இப்­பி­ரச்­சி­னையை இலங்கை அரசு மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யில் அணுக வேண்­டும் என்­றார் அண்­ணா­மலை.

தமது கோரிக்­கை­கள் குறித்து இலங்­கை­யில் உள்ள தமிழ் அர­சி­யல் கட்­சி­கள் கவ­னத்­துக்கு கொண்டு சென்­ற­தாக குறிப்­பிட்ட அவர், இது குறித்து இலங்கை நாடா­ளு­மன்­றத்­தில் முறை­யிட வேண்­டும் என அக்­கட்­சி­க­ளைக் கேட்­டுக்­கொண்­டுள்­ள­தாகத் தெரி­வித்­தார்.

"கடந்த 1974ஆம் ஆண்டு கச்­சத்­தீவு ஒப்­பந்­தத்­தின்­படி, தமி­ழக மீன­வர்­கள் அத்­தீ­வில் வலை­க­ளைக் காயப் போடு­வ­தற்­கும் அதைக் கடந்து நெடுந்­தீவு வரை சென்று மீன் பிடிப்­ப­தற்­கும் அனு­மதி அளிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால், அந்த ஒப்­பந்­தத்­தில், தமி­ழக மீன­வர்­க­ளின் மேற்­கு­றிப்­பிட்ட உரி­மையை உறுதி செய்­யும் 6வது பிரிவை, 1976ஆம் ஆண்டு இலங்கை அரசு நீக்­கியது. "எனவே, அந்­தப் பிரிவை மீண்­டும் கச்­சத்­தீவு ஒப்­பந்­தத்­தில் சேர்க்க வேண்­டும் என தமி­ழக பாஜக வலி­யு­றுத்­து­கிறது," என்று அண்­ணா­மலை மேலும் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த ஏழு மாதங்­களில் மட்­டும் இந்­தியா சார்­பில் இலங்­கைக்கு ரூ.11 ஆயி­ரம் கோடி மதிப்­பி­லான உத­விப் பொருள்கள் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் மேலும் கூறி­னார்.