தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எய்ம்ஸ் மருத்துவமனை: ஜப்பான் நிறுவனம் ரூ.1,500 கோடி நிதி

2 mins read
1f418e81-6af5-4721-be5e-c1f555f6a61d
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் காணப்படும் அறிவிப்புப் பலகை. கோப்புப் படம்: ஊடகம் -

விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என மத்திய அமைச்சர், எம்.பி. தகவல்

மதுரை: மதுரை தோப்­பூ­ரில் எய்ம்ஸ் மருத்­து­வ­மனை கட்­டு­மா­னப் பணி­கள் விரை­வில் தொடங்­கும் என மத்­திய சுகா­தார அமைச்­சர் மன்­சுக் மாண்­ட­வியா தெரி­வித்­துள்­ளார்.

இம்­ம­ருத்­து­வ­ம­னை­யைக் கட்­டு­வ­தற்கு ஜப்­பான் நாட்­டைச் சேர்ந்த ஜைக்கா என்ற நிறு­வ­னம் 1,500 கோடி ரூபாய் நிதி அளிக்க உள்­ள­தா­க­வும் இது தொடர்­பாக அந்­நி­று­வ­னம் மத்­திய அர­சு­டன் ஒப்­பந்­தம் செய்­து­கொண்­டுள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

மது­ரையை அடுத்­துள்ள தோப்­பூர் பகு­தி­யில் அமைய உள்­ளது எய்ம்ஸ் மருத்­து­வ­மனை. மொத்­தம் 224 ஏக்­கர் பரப்­ப­ள­வில் அமைய உள்ள இம்­ம­ருத்­து­வ­ம­னை­யைக் கட்டி முடித்து செயல்­பாட்­டுக்கு கொண்­டு­வர ரூ. 1,977 கோடி தேவைப்­படும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜன­வரி மாதமே கட்­டு­மா­னப் பணி­க­ளுக்கு பிர­த­மர் மோடி அடிக்­கல் நாட்­டி­னார்.

எனி­னும், நிதி ஒதுக்­கீடு செய்­யா­தது, கொரோனா பாதிப்பு உள்­ளிட்ட பல்­வேறு கார­ணங்­க­ளால் கட்­டு­மா­னப் பணி­கள் ஏதும் நடை­பெ­ற­வில்லை.

இந்­தத் திட்­டத்தை மத்­திய அரசு கிடப்­பில் போட்­டு­விட்­ட­தாக தமி­ழக எதிர்க்­கட்­சி­கள் விமர்­சித்­தன. இதே வேளை­யில் பஞ்­சாப், அசாம் உள்­ளிட்ட மற்ற மாநி­லங்­களில் எய்ம்ஸ் மருத்­து­வ­மனை அமைப்­ப­தற்­கான அறி­விப்­பு­கள் வெளி­யாகி கட்­டு­மா­னப் பணி­களும் தொடர்ந்து நடை­பெற்று வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், மதுரை எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னைக்­கான பணி­கள் மீண்­டும் வேக­மெ­டுத்­தன. மருத்­து­வ­ம­னைக்­கான நிலத்தை தமி­ழக அரசு முழு­மை­யாக ஒப்­ப­டைத்­த­தாக தக­வல் வெளி­யா­னது.

கடந்த மாதம் ஜப்­பா­னைச் சேர்ந்த ஜைக்கா நிறு­வ­னம் மதுரை எய்ம்ஸ் மருத்­து­வ­மனை கட்­டு­வ­தற்கு முன்­வந்­துள்­ள­தாக மத்­திய சுகா­தார அமைச்­சும் தக­வல் வெளி­யிட்­டது.

அந்­நி­று­வ­னம் மருத்­து­வ­மனை கட்­டு­மா­னப் பணிக்­கான மொத்த செல­வில் சுமார் 85 விழுக்­காட்டை ஏற்­றுக்­கொள்­ளும் என்­றும் தெரி­வித்­தது.

இந்­நி­லை­யில், ஜப்­பான் நிறு­வ­னம் ரூ. 1,500 கோடி ஒதுக்கி உள்­ளதை மத்­திய சுகா­தார அமைச்­சர் மன்­சுக் மாண்­ட­வியா உறுதி செய்­துள்­ளார். மருத்­து­வ­ம­னைக் கட்டு­மா­னப் பணிக்­குத் தேவைப்­படும் மீத­முள்ள தொகையை அக்­டோ­பர் 26ஆம் தேதிக்­குள் ஒதுக்க மத்­திய அரசு உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்­ளும் என்­றும் அவர் கூறி­னார்.

இந்­நி­லை­யில், தோப்­பூ­ரில் எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னைக் கட்­டு­மா­னப் பணி­கள் விரை­வில் தொடங்­கும் எனத் தம்­மி­டம் தெரி­விக்­கப்­பட்­ட­தாக மதுரை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சு.வெங்­க­டே­சன் கூறி­யுள்­ளார்.

எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னைக்­காக தாம் நாடா­ளு­மன்­றத்­தில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்­த­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னைக் கட்­டு­மா­னம் தொடர்­பான ஒவ்­வொரு நகர்­வு­க­ளுக்­கும் பெரும் முயற்சி செய்து வரு­கி­றேன். அதன்­படி நாடா­ளு­மன்ற விதி எண் 377இன்­படி மதுரை எய்ம்ஸ் மருத்­து­வ­மனை தொடர்­பாக முழு விவ­ரங்­களைத் தரும்­படி மத்­திய சுகா­தா­ரத்­துறை அமைச்­ச­ரி­டம் கோரிக்கை விடுத்­தேன். அது­தொ­டர்­பான முழு விவ­ரத்­தை­யும் மத்­திய சுகா­தா­ரத்­துறை செய­லா­ளர் அளித்­துள்­ளார்," என்று வெங்­க­டே­சன் எம்பி தெரி­வித்­துள்­ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்­து­வ­மனைக் கட்டு­மா­னப் பணி குறித்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்­புக்­குப் பின்­னர், அது அமைய உள்ள பகு­தி­யில் சில சாலை­கள் அமைத்து, சுற்­றுச்­சு­வர் மட்­டுமே எழுப்­பப்­பட்­டுள்ள வகை­யில் அங்கு மிக விரை­வில் கட்­டு­மா­னப் பணி­கள் முழு­வீச்­சில் தொடங்­கும் என எதிர்­பார்க்­கப்­படுகிறது.