தமிழகத்தில் 60 'ஷவர்மா' கடைகளில் சோதனை; அபராதம்

2 mins read
fe6ed825-615e-4830-b03b-8de24e7bb3fc
ஆரணியில் உள்ள அசைவ உணவகத்தில் 'ஷவர்மா' கோழி உணவை உணவுப் பாதுகாப்பு அதிகாரி கைலாஷ்குமார் ஆய்வு செய்கிறார். படம்: ஊடகம் -

தஞ்­சா­வூர்: கேர­ளா­வில் 'ஷவர்மா' கோழி உண­வைச் சாப்­பிட்டு மாணவி ஒரு­வர் உயி­ரி­ழந்­ததை அடுத்து, தமிழ்­நாட்­டின் பல்­வேறு மாவட்­டங்­க­ளி­லும் இந்த உணவு குறித்த புகார்­கள் எழுந்­தன.

தஞ்சை மாவட்­டம், ஒரத்­த­நாட்­டில் உள்ள கால்­நடை மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் படிக்­கும் பிர­வீன், பரி­ம­ளேஸ்­வ­ரன், மணி­கண்­டன் ஆகிய மூன்று மாணவர்களும் இங்குள்ள ஒரு உண­வ­கத்­தில் 'ஷவர்மா' சாப்­பிட்டுள்­ள­னர்.

அதன்­பி­றகு அவர்­க­ளுக்கு வாந்தி, மயக்­கம் ஏற்­பட்­ட­தால் தஞ்சை மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

இதை­ய­டுத்து, ஷவர்­மாவை விற்ற உண­வ­கத்­தில் சோதனை நடத்­திய உண­வுப் பாது­காப்­புத் துறை அதி­கா­ரி­கள், அக்­க­டையை மூடி முத்­திரை வைத்­த­னர்.

இதைத்­தொ­டர்ந்து, தமி­ழ­கம் முழு­வ­தும் உண­வுப் பாது­காப்­புத்­துறை அதி­கா­ரி­கள் 60க்கும் மேற்­பட்ட கடை­களில் நேற்று அதி­ரடிச் சோத­னை­களை நடத்­தி­னர்.

அப்­போது, சென்­னை­யில் உள்ள ஒரு சில கடை­களில் தர­மற்ற வகை­யில் இருந்த உண­வுப் பொருள்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்டு ஆய்­வுக் கூடத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டன.

திருக்­கு­வ­ளை­யில் 60 கிலோ கெட்­டுப்­போன இறைச்­சியை­யும் திரு­வள்­ளூர் மாவட்­டத்தில் உள்ள ஆவடி, பூந்­த­மல்லி, செங்­குன்­றம் உள்­ளிட்ட பல பகு­திகளில் சோதனை செய்து கிலோ கணக்கில் கெட்­டுப்­போன இறைச்­சி­யை­யும் பறி­மு­தல் செய்­த­னர்.

இது­வரை 60 கடை­களில் நடத்­தப்­பட்ட சோத­னை­யில் 10 கடை­களில் இருந்து தர­மற்ற 25 கிலோ கோழி இறைச்சி பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. அதி­கா­ரி­கள் அந்தக் கடை­க­ளுக்கு ஆயி­ரக்­க­ணக்­கில் அப­ரா­த­மும் விதித்­த­னர்.

"வெயில் காலத்­தில் இறைச்­சி­கெட்­டுப் போவ­தற்­கான வாய்ப்­பு­கள் அதி­கம். உண­வ­கங்­களில் இறைச்­சி­க­ளைக் கையாள்­வ­தில் உள்ள குறை­பா­டு­க­ளால்­தான் பொது­மக்­கள் பாதிப்­புக்கு ஆளா­கின்­ற­னர்," என உண­வுப் பாது­காப்­புத் துறை அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.