தமிழகத்தில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு

தமிழகத்தில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு

1 mins read
a556649a-7e82-46fd-9cc0-b6dd83f305d7
-

உதகை: தமி­ழக அரசு வரும் ஆகஸ்ட் மாதத்­துக்­குள் 1 லட்­சம் பேருக்கு வேலை­வாய்ப்பை ஏற்­ப­டுத்­தித் தர திட்­ட­மிட்­டுள்­ளதாக தொழி­லா­ளர் நலன், திறன் மேம்­பாட்­டுத் துறை அமைச்­சர் சி.வி.கணே­சன் தெரி­வித்­தார்.

நீல­கிரி மாவட்­டம், உத­கை­யில் வரும் 12ஆம் தேதி தனி­யார் துறை வேலை­வாய்ப்பு முகாம் நடக்கவுள்ள நிலையில், இதற்கான ஏற்­பா­டு­களைக் காண்பதற்காக உதகைக்கு வந்­தி­ருந்த அமைச்­சர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசினார்.

"தமி­ழ­கத்­தில் இது­வரை 56 இடங்­களில் வேலை­வாய்ப்பு முகாம்­கள் நடத்தப்பட்டு 72,000 பேருக்கு வேலை­வாய்ப்புகள் வழங்கப்­பட்­டுள்ளன.

"மாநில அரசு வரும் ஆகஸ்ட் மாதத்­துக்­குள் 1 லட்­சம் பேருக்கு வேலை­வாய்ப்புகளை வழங்கவும் திட்­ட­மிட்­டுள்­ளது," என அமைச்சர் தெரிவித்தார்.