தொழிலதிபர் தம்பதியர் படுகொலை; சில மணி நேரத்தில் சிக்கிய கொலையாளிகள்

தொழிலதிபர் தம்பதியர் படுகொலை; சில மணி நேரத்தில் சிக்கிய கொலையாளிகள்

3 mins read
1b32b706-604f-4c60-b726-f3cee311ca22
கொல்லப்பட்ட ஸ்ரீகாந்த்-அனுராதா தம்பதியர் (இடப்படம்). மீட்கப்பட்ட நகைகள். படங்கள்: ஊடகம் -
multi-img1 of 2

சென்னை: நகை, பணத்­துக்­காக தொழி­ல­தி­ப­ரும் அவ­ரது மனை­வி­யும் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வம் சென்னை மக்­களை அதிர்ச்­சி­யில் ஆழ்த்­தி­யுள்­ளது.

இது தொடர்­பாக கார் ஓட்­டு­நரும் அவ­ரது நண்­பர் ஒரு­வ­ரும் கொலை நடந்த சில மணி நேரங்­களில் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இரு­வ­ரும் நேப்­பா­ளத்­துக்கு தப்­பிச்­செல்ல இருந்­த­தா­க­வும் கொள்ளை அடிக்­கப்­பட்ட ஆயி­ரம் பவுன் தங்க நகை­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

சென்னை மைலாப்­பூர் பகு­தி­யைச் சேர்ந்த தொழி­ல­தி­ப­ரான 60 வயது ஸ்ரீகாந்த்­தும் அவ­ரது மனைவி அனு­ரா­தா­வும் (55 வயது) கடந்த மார்ச் மாதம் அமெ­ரிக்­கா­வில் உள்ள தங்­கள் மகள் சுனந்­தா­வின் வீட்­டுக்­குச் சென்­றி­ருந்­த­னர்.

சுனந்தா அண்­மை­யில்­தான் ஒரு குழந்­தைக்­குத் தாயா­னார். மக­ளு­டன் இரு மாதங்­கள் செல­விட்ட பின்­னர், நேற்று முன்­தி­னம் இரு­வ­ரும் சென்னை திரும்­பி­னர்.

அதி­காலை 3.30 மணி­ய­ள­வில் சென்னை வந்தடைந்த அவர்­க­ளை கார் ஓட்­டு­நர் கிருஷ்ணா விமான நிலை­யத்­தில் வர­வேற்று மைலாப்­பூ­ரில் உள்ள வீட்­டுக்கு அழைத்­துச் சென்­றார்.

அங்கு ஏற்­கெ­னவே காத்­தி­ருந்த தனது நண்­பர் ரவி­யு­டன் சேர்ந்து தொழி­ல­தி­பர் ஸ்ரீகாந்த்­தை­யும் அவ­ரது மனைவி அனு­ரா­தா­வை­யும் துடிக்­கத்­து­டிக்க அடித்­துக் கொன்­றுள்­ளார் கிருஷ்ணா.

நேப்­பா­ளத்­தைச் சேர்ந்த கிருஷ்­ணா­வின் தந்தை ஸ்ரீகாந்த்­துக்­குச் சொந்­த­மாக இருந்த பண்ணை வீட்­டில் நீண்ட காலம் பணி­யாற்­றி­ய­வர். அத­னால் கிருஷ்­ணா­வுக்கு சிறு வயது முதலே ஸ்ரீகாந்த் குடும்­பத்­தாரை நன்கு தெரி­யும்.

மைலாப்­பூ­ரில் இருந்த வீட்­டில் கிருஷ்­ணா­வுக்கு என தனி அறையை ஒதுக்­கித் தந்து அவரை அங்­கேயே தங்க வைத்­தி­ருந்­தார் ஸ்ரீகாந்த்.

இந்­நி­லை­யில், ஸ்ரீகாந்த் தம்­ப­தி­ய­ரைக் கொலை செய்த பின்­னர், வீட்­டில் இருந்த தங்க நகை­களை மூட்டை கட்டி எடுத்­துக்­கொண்ட கிருஷ்­ணா­வும் அவ­ரது நண்­பர் ரவி­யும் விடி­வ­தற்­குள் இரு­வ­ரை­யும் கிழக்கு கடற்­க­ரைச் சாலை­யில் உள்ள ஸ்ரீகாந்த்­தின் பண்ணை வீட்­டில் புதைக்க முடிவு செய்­த­னர்.

அதன்­படி, இரு­வ­ரது உடல்­களை­யும் எடுத்­துச் சென்று ஒரு மணி நேரத்­துக்­குள் குழி­தோண்டி புதைத்து, பின்­னர் காரில் தப்­பிச் சென்­ற­னர்.

இதற்­கி­டையே, சென்னை சென்­ற­டைந்த பின்­னர் பெற்­றோர் தம்மை தொடர்­பு­கொள்­ளா­த­தால் சந்­தே­க­ம­டைந்த ஸ்ரீகாந்த்­தின் மகள் சுனந்தா, சென்னை காவல்­து­றை­யைத் தொடர்­பு­கொண்­டார்.

இதை­ய­டுத்து, மைலாப்­பூ­ரில் உள்ள அவர் வீட்­டுக்கு காவல்­துறை­யி­னர் சென்­ற­னர். அங்கு வீடு முழு­வ­தும் ரத்­தக்­கறை காணப்­பட்­ட­தால் ஏதோ அசம்­பா­வி­தம் நடந்­தி­ருந்­தது உறு­தி­யா­னது என்று காவல்­துறை கூடு­தல் ஆணை­யர் கண்­ணன் நேற்று செய்­தி­யா­ளர்­களி­டம் தெரி­வித்­தார்.

"சனிக்­கி­ழமை காலை ஸ்ரீகாந்த் தம்­ப­தி­யர் கொல்­லப்­பட்­டது குறித்து, மதி­யம் ஒரு மணி அள­வில்­தான் விவ­ரம் தெரிந்­தது.

"கிருஷ்­ணா­வும் டார்­ஜி­லிங்­கைச் சேர்ந்த ரவி­யும் நேப்­பா­ளத்­துக்கு தப்­பிச்­செல்­லத் திட்­ட­மிட்­டி­ருந்­த­னர். கொலை குறித்து விசா­ரிக்க அமைக்­கப்­பட்ட தனிப்­ப­டை­யி­னர், விரைந்து செயல்­பட்­டதை அடுத்து, ஸ்ரீகாந்த்­தின் கைபேசி சிக்­னலை வைத்து, அவர் ஆந்­திர மாநி­லம் ஓங்­கோல் பகு­தி­யில் இருந்தது கண்டுபிடிக்­கப்­பட்­டது.

"பின்­னர், அங்கு காரில் சென்று­கொண்­டி­ருந்த அவரை ஆந்­திர காவல்­துறை உத­வி­யோடு கைது செய்­தோம். இரு­வ­ரி­டம் இருந்து ஒன்­பது கிலோ தங்­கம், 70 கிலோ வெள்­ளிப்­பொ­ருள்­கள் கைப்­பற்­றப்­பட்­டன.

"கிருஷ்­ணா­வுக்கு 15 வய­தில் ஒரு மகன் இருப்­ப­தும் அவரை டார்­ஜி­லிங் பள்­ளிக்­கூ­டம் ஒன்­றில் சேர்க்க முயன்­ற­போது ரவி­யு­டன் பழக்­கம் ஏற்­பட்­ட­தும் தெரிய வந்தது. காவல்­துறை சில மணி நேரம் தாம­தித்­தி­ருந்­தால், இரு­வ­ரும் நேப்­பா­ளத்­துக்கு தப்­பிச் சென்­றி­ருப்பர்," என்று காவல்­துறை கூடு­தல் ஆணை­யர் கண்­ணன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.