'மகனை படிக்கவைக்க இரட்டைக் கொலை செய்ததாக வாக்குமூலம்'

'மகனை படிக்கவைக்க இரட்டைக் கொலை செய்ததாக வாக்குமூலம்'

2 mins read
28bda249-4ac6-4b91-a8b0-ed206c616944
கொைலையாளிகள் ரவி ராய், கிருஷ்ணா. படம்: தமிழக ஊடகம் -

மயிலாப்பூர்: டார்­ஜி­லிங்­கில் தங்கிப் படித்து வரும் தனது 15 வயது மக­னின் படிப்­புச் செல­வுக்­காக இரட்­டைக் கொலை­க­ளைச் செய்து ரூ.40 கோடி பணத்­தைக் கொள்­ளை­ய­டிக்க முயன்­ற­தாக வாக்­கு­மூலம் அளித்­துள்­ளார் கார் ஓட்­டு­நர் கிருஷ்ணா.

"மயிலாப்­பூ­ரில் வசித்து வந்த ஸ்ரீகாந்த், 60, அனு­ராதா, 55, தம்­பதி­யரை ரூ.40 கோடி பணத்­துக்­கா­கவே எனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்தேன்.

"ஸ்ரீகாந்­தி­டம் நான் கடந்த பத்து ஆண்­டு­க­ளாக வேலை பார்த்து வரு­கி­றேன். என் மீது அவர் அளவு கடந்த நம்­பிக்கை வைத்­தி­ருந்­தார்.

"நான் கார் ஓட்­டு­ந­ராக இருந்­தா­லும் அவர்­க­ளது வீட்டு வேலை­கள் அைனத்­தை­யும் செய்­வேன். ஆனால், எனது உழைப்புக்கேற்ற சம்­ப­ளத்தை கொடுக்­க­வில்லை.

"எனக்கு விவா­க­ரத்து ஆகி­விட்­டது. என் மகன் டார்­ஜி­லிங்­கில் படிக்­கி­றான். நான் ஸ்ரீகாந்த் வீட்­டி­லேயே தங்கி இருந்­தேன். என் மக­னின் படிப்­புக்கு உத­வும்­படி அவ­ரி­டம் கேட்­டேன். அவ­ரி­டம் நிறைய பணம் இருந்­தும் முடி­யாது எனக் கூறி­விட்­டார்.

"தீபா­வளி என்­றால் நகை­கள், துணி­க­ளு­டன் மிக­வும் ஆடம்­ப­ர­மாக குடும்­பத்­து­டன் கொண்­டா­டு­வார். அவர் வீட்­டி­லேயே இருக்­கும் எனக்­கு ஒரு கிலோ இனிப்பு பொட்­ட­லம் மட்­டுமே கொடுப்­பார். அண்ைமயில் ஈசி­ஆ­ரில் ஒரு நிலம் விற்­கப்­பட்­டது. அந்­தப் பணம் ரூ.40 கோடி அவ­ரது வீட்­டில் இருக்­கு­மென நினைத்தே இந்­தக் கொலை­களைச் செய்தோம். ஆனால் 1,000 சவ­ரன் நகை­கள்தான் இருந்­தன.

"கொள்­ளை­ய­டித்த நகை­களுடன் ஆந்­திரா வழி­யாக நேப் பா­ளம் தப்­பிச் செல்ல முயன்­றபோது­ ஆந்திர காவல்துறையினர் கைது செய்தனர்," என்று கிருஷ்ணா வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

மயிலாப்பூர் காவல்துைறயினரின் விசாரணை தொடர்கிறது.