நாடு திரும்பிய கையோடு கொலை செய்த ஆடவர்

நாடு திரும்பிய கையோடு கொலை செய்த ஆடவர்

2 mins read
284c9b36-8fca-43fd-a950-198badea99d5
-

சிவ­கங்கை: தனக்கு குழந்தை பிறந்­ததை அடுத்து, வெளி­நாட்­டில் இருந்து திரும்­பிய ஆட­வர், பச்­சி­ளம் குழந்­தை­யின் முகத்­தைப் பார்க்­கும் முன்பே அண்டை வீட்­டுக்­கா­ரரை அடித்­துக்­கொன்ற சம்­ப­வம் சிவ­கங்­கை­யில் நிகழ்ந்­துள்­ளது.

அங்­குள்ள அண்­டக்­குடி கிரா­மத்­தில் வசித்து வரு­கி­றார் நாகூர் பிச்சை. இவ­ருக்­குப் பக்­கத்து வீட்­டில் சித்­தி­ரை­வேலு என்ற 65 வயது விவ­சாயி தன் மனைவி, மக­னு­டன் வசித்து வந்­தார்.

இரு குடும்­பங்­க­ளுக்­கும் இடையே சில கார­ணங்­க­ளால் அடிக்­கடி தக­ராறு மூண்­டுள்­ளது. இது குறித்து நாகூர் பிச்சை குவைத்­தில் வேலை பார்த்து வந்த தனது மக­னான 35 வயது செல்­வத்­தி­டம் அடிக்­கடி விவ­ரம் தெரி­வித்­துள்­ளார்.

இத­னால் சித்­தி­ரை­வேலு குடும்­பத்­தார் மீது செல்­வம் கடும் கோபத்­தில் இருந்து வந்­தார்.

இந்­நி­லை­யில், ஞாயிற்­றுக்­கிழமை மாலை நாடு திரும்­பி­னார் செல்­வம்.

திருச்சி விமான நிலை­யம் வந்­த­டைந்த அவர், அங்­கி­ருந்து தனது கிரா­மத்­துக்கு வாடகைக் காரில் புறப்­பட்­டுச் சென்­றார்.

கிரா­மத்தை அடைந்­த­தும், தன் வீட்­டுக்கு முத­லில் செல்­லா­மல், காரை விட்டு இறங்­கிய கையோடு முதல் வேலை­யாக சித்­தி­ரை­வேலு வீட்­டுக்­குள் நுழைந்­துள்­ளார் செல்­வம்.

அங்கு அந்த முதி­ய­வ­ரைக் கண்­ட­தும் கீழே கிடந்த ஒரு கட்­டையை எடுத்து கோபத்­து­டன் பாய்ந்­த­வர், சித்­தி­ர­வே­லுவை சர­மா­ரி­யா­கத் தாக்­கி­னார்.

இதில் படு­கா­யம் அடைந்த சித்­தி­ர­வே­லுவை அவ­ரது குடும்­பத்­தார் மதுரை அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக சேர்த்­த­னர். எனி­னும், சிகிச்சை பல­னின்றி அவர் உயி­ரி­ழந்­ததை அடுத்து செல்­வம் கைதா­னார்.

தனக்­குப் பிறந்­துள்ள குழந்­தையை முதன்­மு­றை­யா­கப் பார்க்­கும் முன்பே அவர் கொலை வழக்­கில் சிக்­கி­யது அவ­ரது குடும்­பத்­தாரை சோகத்­தில் ஆழ்த்தி உள்­ளது.