கணக்காய்வாளர் பண்ணை வீட்டில் படுகொலை

கணக்காய்வாளர் பண்ணை வீட்டில் படுகொலை

1 mins read
321e9924-f355-4ac7-a0c9-9e832d2c7f50
-

தஞ்சை: முன்­வி­ரோ­தம் கார­ண­மாக கணக்­காய்­வா­ளர் ஒரு­வர் வெட்­டிக்­கொல்­லப்­பட்ட சம்­ப­வம் தஞ்­சை­யில் பதற்­றத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது. இது தொடர்­பாக மூன்று பேருக்கு வலை­வீ­சப்­பட்­டுள்­ளது.

45 வய­தான கணக்­காய்­வா­ளர் பி.மகேஸ்­வ­ரன் தஞ்­சை­யில் வசித்து வந்­தார். தனது வீட்­டுக்கு அருகே நூறு மீட்­டர் தொலை­வில், பண்ணை அமைத்து அதில் ஆடு, கோழி ஆகி­ய­வற்றை வளர்த்து வந்­த­வர், தென்னை மரங்­களை வளர்ப்­ப­தி­லும் ஆர்­வம் கொண்­டி­ருந்­தார்.

மகேஸ்­வ­ரன் தனது பண்­ணைக்கு எதிரே இருந்த மாந­க­ராட்­சிக் கழி­வ­றைக் கட்­ட­டத்­தை­யும் அண்­மை­யில் ஏலத்­துக்கு எடுத்­தி­ருந்­தார். இது தொடர்­பாக அவ­ருக்­கும் அதே பகு­தி­யைச் சேர்ந்த சில­ருக்­கும் முன்­வி­ரோ­தம் இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் பண்ணை வீட்­டில் மகேஸ்­வ­ரன் ஓய்­வெ­டுத்­துக் கொண்­டி­ருந்­த­போது, அடை­யா­ளம் தெரி­யாத மூன்று பேர் வீட்­டுக்­குள் புகுந்­த­னர். அடுத்த ஓரிரு நிமி­டங்­க­ளுக்­குள் மூவ­ரும் மகேஸ்­வரனை அரி­வாள் உள்­ளிட்ட ஆயு­தங்­க­ளால் சர­மா­ரி­யாக தாக்­கி­ய­தில், அவர் ரத்த வெள்­ளத்­தில் சரிந்து விழுந்து அங்­கேயே உயிர் இழந்­தார்.

இதை­ய­டுத்து, அம்­மூ­வ­ரும் அங்­கி­ருந்து இரு­சக்­கர வாக­னத்­தில் தப்­பிச்­சென்­ற­னர். மகேஸ்­வ­ர­னின் அல­றல் சத்­தம் கேட்டு ஓடி­வந்த அக்­கம்­பக்­கத்­தி­னர், உட­ன­டி­யாக காவல்­து­றைக்கு தக­வல் தெரி­வித்­த­னர். முதற்­கட்ட விசா­ர­ணை­யில், மாந­க­ராட்­சிக் கழி­வ­றைக் கட்­ட­டத்தை ஏலத்­தில் எடுப்­பது தொடர்­பான முன்­வி­ரோ­தமே படு­கொ­லைக்­குக் கார­ணம் எனத் தெரியவந்­துள்­ளது.