ரகுபதி: ஆளுநருடன் மோதல் போக்கு ஏதும் இல்லை "ஆளுநர் மாளிகையில் பத்து மசோதாக்கள் நிலுவையில் உள்ளன"

ரகுபதி: ஆளுநருடன் மோதல் போக்கு ஏதும் இல்லை "ஆளுநர் மாளிகையில் பத்து மசோதாக்கள் நிலுவையில் உள்ளன"

2 mins read
dc64f187-a44a-4c16-ade5-a48b7d101ec6
ரகுபதி. படம்: ஊடகம் -

புதுக்கோட்டை: தமி­ழக ஆளு­நர் மாளிகை­யில் பத்து மசோ­தாக்­கள் நிலு­வை­யில் உள்­ள­தாக தமி­ழக சட்­டத்­துறை அமைச்­சர் ரகு­பதி தெரி­வித்­துள்­ளார்.

நீட் தேர்­வில் இருந்து தமி­ழ­கத்­துக்கு விலக்கு அளிக்க வேண்­டும்­என்ற மசோ­தாவை மத்­திய அர­சுக்கு ஆளு­நர் அனுப்பி உள்­ள­தாக புதுக்­கோட்­டை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில் அவர் குறிப்­பிட்­டார்.

ஆளு­நர் தனது பணியை முடித்து­விட்ட நிலை­யில், நீட் தேர்வு விவ­கா­ரத்­தில் இனி­மேல் என்ன நடக்­கிறது என்­பதை பொறுத்திருந்து­தான் பார்க்க வேண்­டும் என்­றார் அமைச்­சர்.

"எந்த மசோ­தாக்­கள் மீதும் காலம் தாழ்த்­தக்­கூ­டாது என்று உச்­ச ­நீ­தி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது. நாங்­கள் ஆளு­ந­ரு­டனோ, அதி­பருடனோ மோதல் போக்கை கடை­ப்பி­டிக்­க­வில்லை.

"மக்­கள் நலன் கருதி அளிக்­கும் மசோ­தா­க்கள் தொடர்­பில் வீண் தாம­தம் ஏற்­ப­டக்­கூ­டாது என்­று­தான் சொல்­கி­றோம்.

"இணை­யம் வழி நடை­பெ­றும் சூதாட்­டத்தை ஒழிக்க கடந்த ஆட்­சி­யில் இயற்­றப்­பட்ட சட்­டம் செல்­லாது என உயர் நீதி­மன்­றம் அறி­வித்­த­து­டன், புதிய சட்­டம் இயற்­ற­லாம் என­வும் கூறி­யி­ருந்­தது.

"எனி­னும், அரசு தலைமை வழக்­க­றி­ஞ­ரின் ஆலோ­ச­னை­யின் பேரில் அந்த சட்­டத்­தில் திருத்­தம் செய்து மேல்­மு­றை­யீடு செய்­துள்­ளோம். இதற்கு உச்ச நீதி­மன்­றத்­தில் சாத­க­மான தீர்ப்பு வரும் என்று நம்­பு­கி­றோம்," என்று அமைச்­சர் ரகு­பதி தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழக அர­சுக்­கும் ஆளு­நர் ரவிக்­கும் இடையே மறை­முக மோதல் நிலவி வரு­கிறது. அர­சின் செயல்­பா­டு­களில் ஆளு­நர் தலை­யி­டக்­கூ­டாது என ஆளும் தரப்பு கூறு­கிறது.

இந்­நி­லை­யில், தமி­ழக அரசு ஒப்­பு­த­லுக்­காக அளிக்­கும் மசோ­தாக்­கள் மீது முடி­வெ­டுப்­ப­தில் ஆளு­நர் தரப்­பில் தேவை­யின்­றித் தாம­தம் ஏற்­ப­டு­வ­தா­க­வும் ஆளும் திமுக குறை­கூ­றி­யுள்­ளது. ஆனால் ஆளு­நர் தரப்பு இதை திட்­ட­வட்­ட­மாக மறுத்­துள்­ளது.

கச்­சத்­தீவு விவ­கா­ரம்

இதற்­கி­டையே கச்­சத்­தீவை மீட்க வேண்­டும் என பிர­த­மர் மோடி­யி­டம் தமி­ழக முதல்­வர் வலி­யு­றுத்தி உள்­ள­தா­க­வும் அதற்கு தேவை­யான எல்லா நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­படும் என்­றும் அமைச்­சர் ரகு­பதி செய்­தி­யா­ளர்­களி­டம் தெரி­வித்­தார்.