கடை உரிமையாளரை பிச்சை எடுக்க அழைத்த பிச்சைக்காரர்

2 mins read
d8a6bd53-74c8-4448-86c7-2e44d6e7bfae
-

திருப்­பூர்: மிதி­வண்டி உதிரி பாகங்­கள் விற்­கும் கடை­யின் உரி­மை­யா­ளரை தம்­மு­டன் பிச்சை எடுக்க வரு­மாறு திருப்­பூ­ரைச் சேர்ந்த ஒரு பிச்­சைக்­கா­ரர் அழைத்­துள்­ளார். இது­தொ­டர்­பான காணொளி சமூக ஊட­கங்­களில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கிறது.

திருப்­பூர் மாவட்­டம் வெள்­ளக்­கோ­வில் கடை­வீ­தி­யில் பல பிச்­சைக்­கா­ரர்­கள் தின­மும் பிச்சை எடுத்து வரு­கின்­ற­னர்.

அவர்­களில் ஒரு­வர் பெரிய சாட்­டை­யால் தம்­மைத்­தாமே அடித்­துக்­கொண்டு பிச்சை எடுக்­கி­றார்.

அண்­மை­யில் அங்­குள்ள மிதி­வண்டி உதிரி பாகங்­கள் விற்­கப்­படும் கடைக்­குச் சென்ற அவர், அந்­தக் கடை­யின் உரி­மை­யா­ள­ரி­டம் பிச்சை கேட்­டுள்­ளார். அதற்­குக் கடை உரி­மை­யா­ளர், பிச்­சைக்­கா­ர­ருக்கு அறி­வுரை கூறி­னார்.

கை,கால்­கள் நன்­றாக இருப்­ப­தால் தனது கடை­யி­லேயே வேலை தரு­வ­தா­க­வும் தின­மும் 400 ரூபாய் சம்­ப­ளம் தரு­வ­தா­க­வும் அந்­தக் கடைக்­கா­ரர் தெரி­வித்­துள்­ளார்.

அவர் சொன்­ன­தைக் கேட்ட, பிச்­சைக்­கா­ரர், தாம் நாள்­தோ­றும் இரண்­டா­யி­ரம் ரூபாய் சம்­பா­திப்­ப­தா­க­வும் வெறும் நானூறு ரூபாய்க்கு வேலை பார்க்க முடி­யாது என்­றும் கூறு­கி­றார்.

இந்­தப் பதி­லைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கடை உரி­மை­யா­ளர், "இப்­படி ஓசி­யில் பணம் கொடுத்­தால் நீ சம்­பா­திக்கத்தான் செய்­வாய்," என்று ஆதங்­கத்­து­டன் கூற, அதற்­கும் பதி­லடி கொடுக்­கி­றார் பிச்­சைக்­கா­ரர்.

"பிச்சை கொடுப்­ப­தாக இருந்­தால் இருக்கு என சொல்­லுங்­கள், இல்லை என்­றால் இல்லை என சொல்­லுங்­கள். வேண்­டு­மா­னால் நீங்­களும் என்­னு­டன் பிச்சை எடுக்க வர­லாம். நான் தின­மும் இரண்­டா­யி­ரம் ரூபாய் தரு­கி­றேன்," என்று கூறி­விட்டு நடை­யைக் கட்­டு­கி­றார் பிச்­சைக்­கா­ரர்.

கடை­யில் உள்ள கண்­கா­ணிப்­புக் கேம­ரா­வில் இந்தக் காட்சி பதிவாகி உள்ளது.