தாஜ்மகால் வழக்கு: மனுதாரருக்கு கண்டனம்

தாஜ்மகால் வழக்கு: மனுதாரருக்கு கண்டனம்

2 mins read
22810efd-9624-487b-84a5-fadd33cb1422
-

அல­கா­பாத்: தாஜ்­ம­கா­லில் புதைந்­துள்ள ரக­சி­யங்­களை அம்­ப­லப்­படுத்த உத்­த­ர­வி­டக் கோரி, பாஜக நிர்­வாகி தாக்­கல் செய்த வழக்கைத் தள்­ளு­படி செய்த அல­கா­பாத் உயர் நீதி­மன்­றம் மன­தா­ர­ருக்கு கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது.

உத்­த­ரப்­ பி­ர­தேச மாநி­லம், ஆக்­ரா­வில் உலக அதி­ச­யங்­களுள் ஒன்­றான புகழ்­பெற்ற தாஜ்மகால் ­அைமந்­துள்­ளது.

மனைவி மும்­தாஜ் நினை­வாக மன்­னர் ஷாஜ­கான் கட்­டிய தாஜ்மகால், ஒரு காலத்­தில் சிவன் கோயி­லாக இருந்­த­தாக சில அமைப்­பு­கள் சர்ச்­சையை ஏற்­படுத்தி வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், அயோத்­தி­யைச் சேர்ந்த பாஜக நிர்­வாகி திரு ரஜ்­னிஷ் சிங், அல­கா­பாத் உயர் நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்துள்ள மனு­வில், தாஜ்மகால் குறித்த உண்­மையை நாட்டு மக்களுக்­குத் தெரி­யப்­ப­டுத்த, அங்கு பூட்­டப்­பட்­டுள்ள 22 அறை­க­ளைத் திறக்க உத்­த­ர­வி­ட­வேண்­டும் என்று கோரி­யி­ருந்­தார்.

இந்த வழக்கு நேற்று முன் தினம் விசா­ர­ணைக்கு வந்­தது. அப்­போது இது­கு­றித்து வாதிட்ட மனு­தா­ர­ரின் வழக்­க­றி­ஞர், பூட்­டிக் கிடக்­கும் அறை­க­ளைத் திறந்து உண்­மை கண்­ட­றி­யும் குழு மூலம் ஆய்வு செய்ய உத்­த­ரப் பிர­தேச அர­சுக்கு உத்­த­ர­விட வேண்­டும் என்று கூறி­னார்.

தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தில் மனு செய்­த­போது, பாது­காப்­புக் கார­ணங்­க­ளுக்காகவே அறை­கள் பூட்­டப்­பட்­டுள்ளதாக பதில் அளிக்­கப்­பட்­ட­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

தாஜ்மகால் கட்­டப்­பட்ட இடம் சிவன் கோயில் இடமா அல்­லது மசூதி இடமா எனத் தான் கேட்க வில்லை என்­றும் அவர் கூறி­னார்.

அப்­போது குறுக்­கிட்ட நீதி பதி­கள், ஒரு இடத்தை ஆய்வு செய்ய உத்­த­ர­வி­ட­வேண்­டும் என எந்­தச் சட்­டத்­தில், எங்கு கூறப்­பட்டுள்­ளது என்று வின­வி­னர்.

இது­கு­றித்து பிஎச்டி படிப்­பில் தலைப்பு எடுத்து ஆராய்ச்சி செய்ய மனு­தா­ர­ருக்கு தடை இல்லை என்­றும் தெரி­வித்­த­னர்.

இன்று தாஜ்மகால் அறையை திறக்­கச் சொல்­வீர்­கள், நாளை நீதி­ப­தி­க­ளின் அறை­க­ளுக்­குள் செல்­ல­வும் ஆய்வு செய்­ய­வும் அனு மதிக்­க­வேண்­டும் என கோரு­வீர்­களா? என்று கேட்­ட­னர்.

பொது நல வழக்கு தாக்­கல் செய்­யும் நடை­மு­றையை கேலிக் கூத்­தாக்க வேண்­டாம் என மனு தார­ருக்­குக் கண்­ட­னம் தெரி­வித்த நீதி­ப­தி­கள், வழக்­கைத் தள்­ளு­படி செய்து உத்­த­ர­விட்­ட­னர்.