ஹெலிகாப்டர் விபத்து: இரு விமானிகள் உயிரிழப்பு

ஹெலிகாப்டர் விபத்து: இரு விமானிகள் உயிரிழப்பு

2 mins read
0c40a478-7243-47e7-9c6b-4380928acb4c
ராய்ப்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தா விமான நிலையத்தில், சத்தீஸ்கர் மாநில ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் உயிரிழந்த கேப்டன் கோபால் கிருஷ்ண பாண்டே (இடது). மற்றொருவர் படத்தில் இல்லை.படம்: ஊடகம் -

ராய்ப்­பூர்: சத்­தீஸ்­கர் மாநி­லம், ராய்ப்­பூ­ரில் உள்ள சுவாமி விவே கானந்தா விமான நிலைய ஓடு பாதை­யில் அரசு ஹெலி­காப்­டர் ஒன்று விழுந்து நொறுங்­கி­ய­தில் இரு விமா­னி­கள் உயி­ரி­ழந்­த­னர்.

ராய்ப்­பூர் விமான நிலை­யத்­தில் வழக்­க­மாக நடை­பெ­றும் பயிற்­சி­யின்போது, ஓடு­பா­தை­யில் விமா­னத்தை இயக்கிப் பார்த்து விமா­னி­கள் பயிற்சி எடுத்­துக்­கொள்­வர்.

இது­போல், விமா­னி­கள் கேப்­டன் கிருஷ்ணா பாண்­டே­வும் கேப்­டன் ஏபி ஸ்ரீவஸ்­த­வா­வும் பயிற்­சி­யில் ஈடு­பட்­டுக்கொண்­டி­ருந்­தனர். அப்­போது, ஓடு­பா­தை­யில் எதிர் பாராதவிதமாக நடந்த விபத்­தில், விமா­னி­கள் இரு­வ­ரும் உயி­ரி­ழந்­த­னர்.

இந்த விபத்­தில் ஹெலி­காப்­டர் முற்­றி­லும் சேத­ம­டைந்­தது.

இரு விமானிகளில் ஒருவர் விபத்து நடந்த இடத்­தி­லேயே இறந்த நிலை­யில், மற்­றொ­ரு­வர் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்படும் வழி­யில் உயி­ரி­ழந்­தார்.

தொழில்­நுட்­பக் கோளாறு கார­ண­மாகவே இந்த விபத்து நேர்ந்­துள்­ள­தாக முதல்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளதாக விமான நிலைய தக­வல் வட்­டா­ரங்­கள் தெரி­வித்­துள்­ளன.

சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து இயக்­கு­ந­ர­கம் இதுதொடர்­பாக விரி­வான விசா­ரணை நடத்­த­வும் மாநில அர­சு உத்­த­ர­விட்­டுள்­ளது.

இந்த விபத்து குறித்து தனது டுவிட்­டர் பக்­கத்­தில் சத்­தீஸ்­கர் முதல்­வர் பூபேஷ் பாகேல் தெரி­வித் துள்ள இரங்­கல் செய்­தி­யில், "ராய்ப்­பூ­ரில் உள்ள விமான நிலை­யத்­தில் மாநில ஹெலி­காப்­டர் விபத்­துக்­குள்­ளான துன்பமான செய்தி கிடைத்­தது.

இவ்விபத்­தில், எங்­கள் விமா­னி­கள் கேப்­டன் பாண்டே, கேப்­டன் ஸ்ரீவஸ்­தவா இரு­வ­ரும் உயி­ரி­ழந்­த­னர். அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த துயரத்தில் இருந்து மீள்வதற்கு கட­வுள் பலத்­தை­யும் இறந்த ஆன்­மா­வுக்கு சாந்­தி­யை­யும் தரட்டும். விபத்து குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது," என்று பதி­விட்­டுள்­ளார்.