சூரப்பள்ளம் கிராமத்தில் தூக்குத் தேர்த் திருவிழா

சூரப்பள்ளம் கிராமத்தில் தூக்குத் தேர்த் திருவிழா

1 mins read
901aded0-7637-4acf-9f01-1f17b26adfc7
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரைத் தூக்கிச் செல்கின்றனர். -

பட்­டுக்­கோட்டை: சூரப்­பள்­ளம் கிரா­மத்­தில் பக்­தர்­கள் தேரை தூக்­கிச் செல்­லும் தூக்­குத் தேர்த் திரு­விழா சிறப்­பாக நடைெபற்­றது.

வழக்­க­மாக கோயில்­களில் நடை­பெ­றும் விழாக்­களில் ேதரை வடம் பிடித்து இழுத்­துச் செல்­வது வழக்­கம். ஆனால், தஞ்சை மாவட்­டம் பட்­டுக்­கோட்டை அருகே உள்ள சூரப்­பள்­ளம் கிரா­மத்­தில் ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்­கள் ஒன்றுசேர்ந்து தேரை தோளில் சுமந்துசென்­ற­னர்.

கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக ஊர­டங்கு கார­ண­மாக திரு­விழா நடை­பெ­றா­மல் இ­ருந்த நிலை­யில், 400 ஆண்­டு­கள் பழை­மை­வாய்ந்த சூர மாகா­ளி­யம்­மன் கோயி­லில் தூக்­குத் தேர்த் திரு­விழா நடை பெற்­றது. அலங்­க­ரிக்­கப்­பட்ட தேரை தோளில் சுமந்­த­வாறு பக்தர்கள் அங்­குள்ள குளக்­க­ரை­யைச் சுற்றி வந்­த­னர்.

இந்த தூக்­குத் தேரோட்­டத்தைக் காண உள்­ளூர், சுற்று வட்­டா­ரங்களைச் சேர்ந்த ஆயி­ரக் கணக்­கா­னோர் திரண்­ட­னர்.

40 அடி உய­ர­மும் 6 டன் எடை­யு­ம் கொண்ட தேரை சூரப்­பள்­ளம் கிரா­மத்­தைச் சேர்ந்த ஏழு குழு­வி­னர், நான்கு பிரி­வு­க­ளாக, தனித்­தனி சீருடை அணிந்து தூக்கியபடி ஊர்­வ­லம் வந்­த­னர். கடந்த 90 ஆண்­டு­க­ளாக இந்த தூக்­குத் தேர் ஊர்­வ­லம் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து வருகிறது.