விழாவில் ரூ.500 லஞ்சம்: பத்திரிகையாளர்கள் அதிருப்தி

விழாவில் ரூ.500 லஞ்சம்: பத்திரிகையாளர்கள் அதிருப்தி

1 mins read
ac40c3b0-93a9-4570-bd23-582137017a2c
-

கோவை: தமி­ழக ஆளு­நர் ஆர்.என். ரவி பங்­கேற்ற பட்­ட­ம­ளிப்பு விழா­வுக்குச் செய்தி சேக­ரிப்­ப­தற்­காக வந்த பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளி­டம் ரூ.500 பணத்­து­டன் கூடிய கோப்பு கள் வழங்­கப்­பட்­டன. இத­னால் அவர்­கள் அதி­ருப்தி அைடந்­த­னர்.

கோவை பார­தி­யார் பல்­க­லைக் கழ­கத்­தில் 37வது பட்­ட­ம­ளிப்பு விழா நேற்று நடந்­தது.

ஆளு­நர் ஆர்.என். ரவி தலைமை வகித்து 1,687 பேருக்கு பி.எச்டி., பட்­ட­மும் முது­நிலை, இள­நிலைப் பிரி­வு­களில் பல்­க­லைக்கழக அள­வில் முத­லி­டம் பெற்ற 267 மாண­வர்­க­ளுக்கு பட்­டத்­து­டன் தங்­கப் பதக்­கத்­தை­யும் வழங்­கி­னார்.

இந்­நி­லை­யில், விழா­வில் செய்தி சேக­ரிப்பதற்காக வந்திருந்த அனைத்து பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்­கும் பல்­க­லைக்­க­ழ­கம் சார்­பில் வழங்­கப்பட்ட கோப்­பு­களில் ஓர் உறை­யில் ரூ.500 பணம் வைத்து கொடுக்­கப்­பட்­டுள்ளது. ஆளுநர் கலந்துகொண்ட நிகழ்விலேயே இப்படியா என கேள்வி எழுந்துள்ளது.