வங்கிப் பணிக்குத் தமிழ் தேவை இல்லை: அறிவிப்பால் சர்ச்சை

வங்கிப் பணிக்குத் தமிழ் தேவை இல்லை: அறிவிப்பால் சர்ச்சை

1 mins read
429a3816-eca9-4447-8650-9c7a11521ff5
-

சென்னை: தமி­ழ­கத்­தில் வங்­கிப் பணி­க­ளுக்குத் தேர்வு பெற தமிழ் தெரிந்­தி­ருப்­பது கட்­டா­ய­மில்லை என்று வங்­கிப் பணி­யா­ளர் தேர்வு நிறு­வ­னம் அறி­வித்­துள்­ளது புதிய சர்ச்­சைக்கு வித்­திட்­டுள்­ளது.

இது­தொ­டர்­பாக கருத்து தெரி­வித்­துள்ள அகில இந்­திய ஓரி­யன்­டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்­கி­யின் தொழி­லா­ளர் நல­ச்சங்க பொதுச் செய­லா­ளர் ஜி.கரு­ணா­நிதி, முன்பு தமி­ழ­கத்­தில் உள்ள வங்­கி­களில் சுமார் 30 விழுக்­காடு அள­வில் வெளி­மா­நி­லத்­த­வர்­களே பணி­ய­மர்த்­தப்­பட்டு வந்­த­தா­க­வும் தற்­போது, இந்த எண்­ணிக்கை 50% ஆக அதி­க­ரித்­துள்­ள­தா­க­வும் குறிப்­பிட்­டுள்­ளார்.

அண்­மை­யில் தமி­ழ­கத்­தில் உள்ள வங்­கி­களில் பணி­யாற்ற 843 பணி­யா­ளர்­கள் தேர்வு செய்­யப்­பட்­ட­தில், சுமார் 400 பேர் வெளி­மா­நி­லத்­த­வர் என்று தெரிய வந்­துள்­ளது.

இதைச் சுட்­டிக்­காட்டி உள்ள ஜி.கரு­ணா­நிதி, இது­கு­றித்து இந்­திய வங்­கி­கள் சங்­கத்­தில் புகார் அளித்­துள்­ள­தாகத் தெரி­வித்­துள்­ளார்.

"தமிழ் தெரி­யாத வெளி­மா­நி­லத்­த­வர்­கள் கிரா­மப்­பு­றங்­களில் உள்ள வங்­கி­களில் பணி­யாற்­று­வ­தால், வாடிக்­கை­யா­ளர்­கள் வங்­கிச் சேவை பெறு­வ­தில் பாதிப்பு ஏற்­ப­டு­வ­தும் தமிழ் தெரிந்த பணி­யா­ளர்­க­ளி­டம் செல்­லு­மாறு அவர்­கள் கைகாட்டி விடு­வ­தும் வாடிக்­கை­யா­கி­யுள்­ளது," என்றார் ஜி.கரு­ணா­நிதி.