30 ஆண்டுகளாக ஆண் வேடமிட்டு வாழும் பெண்

30 ஆண்டுகளாக ஆண் வேடமிட்டு வாழும் பெண்

1 mins read
37f007e1-5a7d-46cf-9657-be03cf330756
இளம் வயதிலும் இப்போதும் பேச்சியம்மாள். படம்: ஊடகம் -

தூத்­துக்­குடி: தூத்­துக்­குடி மாவட்­டம், காட்­டு­நா­யக்­கன்­பட்டி கிரா­மத்தைச் சேர்ந்த பேச்­சி­யம்­மாள் கடந்த 30 ஆண்­டு­க­ளாக ஆண் வேட­மிட்டு வாழ்ந்து வந்­துள்­ளார்.

இவ­ருக்கு இரு­பது வய­தில் திரு­ம­ணம் நடந்­தது. அடுத்த இரு வாரங்­களில் கண­வர் மார­டைப்­பால் கால­மா­னார். அதற்­குள் தாய்­மை­யடைந்த பேச்­சி­யம்­மா­ளுக்கு பெண் குழந்தை பிறந்த நிலை­யில், இரண்­டா­வது திரு­ம­ணத்­துக்கு குடும்­பத்­தார் வற்­பு­றுத்­தி­ய­போ­தும் மறுத்­து­விட்­டார்.

இதை­ய­டுத்து பாலி­யல் உள்­ளிட்ட தொல்­லை­களில் இருந்து தப்­பிக்க தன் அடை­யா­ளத்­தையே மாற்­றிக்கொண்­டார். ஆண்­க­ளைப் போன்ற சிகை­ய­லங்­கா­ரம், ஆண்­கள் அணி­யும் ஆடை­யு­டன், தன் பெய­ரை­யும் முத்து என மாற்­றிக் கொண்­டார்.

அனை­வ­ரும் இவரை மாஸ்­டர் அல்­லது அண்­ணாச்சி என்று குறிப்­பி­டு­கின்­ற­னர்.

கடி­ன­மாக உழைத்து தன் மகளை வளர்த்து ஆளாக்கி, திரு­ம­ண­மும் செய்து கொடுத்­துள்ள முத்து என்ற பேச்­சி­யம்­மா­ளுக்கு இப்­போது 57 வய­தா­கி­விட்­டது.

எந்த நோக்­கத்­துக்­காக தன் அடை­யா­ளத்தை மாற்­றிக் கொண்­டாரோ, அது நிறை­வேறி­விட்­டது என்­கி­றார்.

"ஆதார் அட்டை, வாக்­கா­ளர் அட்டை என அனைத்­தி­லும் எனது பெயர் முத்து என்­று­தான் உள்­ளது. இத­னால் பெண்­களுக்­கான உத­வித்­தொகை எது­வும் கிடைக்­க­வில்லை. எனது ஏழ்மை நிலை­யைக் கருதி, அர­சாங்­கம் முதி­யோர் உத­வித்­தொகை அளித்­தால் நன்­றாக இருக்­கும்," என்­கி­றார் பேச்­சி­யம்­மாள்.