திரு­மண ஆசை காட்டி 100க்கு மேலான பெண்­க­ளி­டம் மோசடி

திரு­மண ஆசை காட்டி 100க்கு மேலான பெண்­க­ளி­டம் மோசடி

1 mins read
7244bcd9-1223-4a6a-9b34-e945ad2cc744
பர்­ஹான் தசீர் கானி­டம் இருந்து (நடு­வில்) ஒரு சொகுசு கார், ஒன்­பது ஏடி­எம் அட்­டை­கள், நான்கு சிம் கார்­டு­கள் கொண்ட ஒரு கைப்பேசி, ஒரு விலை­யு­யர்ந்த கைக்­க­டி­கா­ரம் ஆகி­ய­வற்றை காவல்­துறை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர். படம்: ஊடகம் -

புது­டெல்லி: திரு­ம­ணம் செய்­து­கொள்­வ­தா­கக் கூறி 100க்கும் மேற்­பட்ட பெண்­களை ஏமாற்­றிய பர்­ஹான் தசீர் கான் என்ற 35 வயது நபரை டெல்லி காவல்­துறை கைது செய்­துள்­ளது.

உத்­த­ரப்­பி­ர­தே­சம், பீகார், மேற்கு வங்­கம், குஜ­ராத், டெல்லி, பஞ்­சாப், மும்பை, ஒடிசா, கர்­நா­டகா என பல பகு­தி­க­ளைச் சேர்ந்த பெண்­க­ளி­டம் இவர் மோசடி செய்­துள்­ளார்.

இது தொடர்­பாக தெற்கு டெல்லி டிசிபி பெனிதா மேரி கூறு­கை­யில், "டெல்­லி­யைச் சேர்ந்த ஒரு பெண் டாக்­டர் இணை­யக் குற்­றப் பிரிவு காவல்­து­றைக்கு புகார் அளித்­துள்­ளார். அதில், jeevansathi.com என்ற திரு­மண வரன் பார்க்­கும் இணைய தளத்­தில் திரு­ம­ணம் செய்­து­கொள்­வ­தாக அறி­மு­க­மான நபர் ஒரு­வர் தன்­னி­டம் அறி­மு­க­மாகி தன்­னி­டம் பல முறை பணம் பெற்று ரூ.15 லட்­சம் வரை­யில் மோசடி செய்­துள்­ளார் என மோசடி புகார் அளித்­துள்­ளார்.

"இவ­ரது புகா­ரின் அடிப்­ப­டை­யில் காவல்­துறை நடத்­திய விசார ணையில் சம்­பந்­தப்­பட்ட ஆட­வர் கைது செய்­யப்­பட்­டார்," என்­றார்.